search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    உங்கள் குழந்தையை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்
    X

    உங்கள் குழந்தையை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

    குழந்தையின் வளர்ச்சியை கண்டு மகிழ்வதில் பெற்றோருக்கு அளவில்லா இன்பம்.
    குழந்தையின் வளர்ச்சியை கண்டு மகிழ்வதில் பெற்றோருக்கு அளவில்லா இன்பம். சில சமயங்களில் குழந்தையின் வளர்ச்சிப் படிகள் சீறாக அமைவதில்லை. அப்படிப்பட்ட குழந்தைகளை எவ்வாறு கண்டு கொள்வது என்பதை பற்றி பார்க்கலாம்.

    குழந்தை பிறப்பிற்கு பின் உள்ள வளர்ச்சிப்படிகளைப் பற்றி பார்ப்போம்.

    குழந்தையின் வளர்ச்சியை இரண்டு பெரும் பிரிவுகளாக பிரிக்கலாம்.

    1. உடல் சார்ந்த வளர்ச்சிகள்

    2. அறிவு சார்ந்த வளர்ச்சிகள் இதில் உடல் சார்ந்த வளர்ச்சி என்பது குழந்தை பிறந்தது முதல் நடக்கும் வரை உள்ள பல்வேறு வளர்ச்சிப் படிகள். அதாவது குழந்தை பிறந்து 3 முதல் 4 மாதத்திற்குள் காலை நிற்க வேண்டும். 4 முதல் 5 மாதத்தில் திரும்பி படுத்தல்,

    6-7 மாதத்தில் நெஞ்சால் தேய்த்துக் கொண்டு முன்னே நகருதல், 7-8 மாதத்தில் கைகளை ஊன்றி உட்காருதல், 8-9 மாதத்தில் தவழுதல், 9-10 மாதத்தில், உதவியுடன் பிடித்துக் கொண்டு நிற்றல், 10-11 மாதத்தில் உதவியுடன் நடத்தல்,

    11-12 மாதத்தில் தனியாக நடத்தல், 14-18 மாதங்களில் மாடிப்படி ஏறுதல், 18-24 மாதங்களில் மாடிப்படி இறங்குதல், இந்த வளர்ச்சிப்படிகள் ஒன்றி அல்லது இரண்டு மாதங்கள் முன் பின் நடக்கலாம். ஆனால் அதைவிட அதிகமாக (இரண்டு மாதங்கள் கழிந்தும்) மாதங்கள் கடந்தும் வளர்ச்சிப்படியில் மாற்றம் இல்லை என்றால் நீங்கள் உடனடியாக மருத்துவரை அனுகி அதற்கான மருத்துவத்தை ஆரம்பிக்க வேண்டும்.

    ஏனென்றால் சில பெற்றோர்கள் சரியான மாதத்தில் குழந்தையின் வளர்ச்சிப்படி இல்லை என்றாலும் அதை உடனடியாக கவனிக்க மறந்து விடுகின்றனர். அல்லது நமது குடும்பததில் எல்லோரும் சற்று தாமதமாகத்தான் நடந்தார்கள் என்று எண்ணி குழந்தையை வீட்டிலே வைத்து விடுகின்றனர். பின் தாமதமாக பயிற்சியளிப்பது மிக குறைவான முன்னேற்றத்தையே தரும்.

    2. அறிவு சார்ந்த வளர்ச்சிப் படிகள்:- குழந்தையின் அறிவு சார்ந்த வளர்ச்சிப் படிகள் ஏற்படும் மாற்றங்களை உன்னிப்பாக கவனித்தால் மட்டுமே நம்மால் கண்டு கொள்ள முடியும். எளிமையாக கண்டு கொள்ள நான் இங்கு குழந்தையின் சில நடவடிக்கைகளை மட்டும் குறிப்பிடுகிறேன்.

    1. குழந்தையை கூப்பிடும் போது திரும்பிப் பார்க்காமல் இருத்தல்.

    2. குழந்தையிடம் பேசும் போது முகத்தை பார்க்காமல் இருத்தல்.

    3. மற்ற குழந்தைகளுடன் சேர்ந்து விளையாடாமல் இருந்தல்.

    4. தனியாக விளையாடுதல்.

    5. சில சமயங்களில் அடம் பிடித்தல்/ அழுது கொண்டே இருத்தல்.

    6. ஓரிடத்தில் அமராமல் சுற்றிக் கொண்டே இருத்தல்.

    7. பொது இடங்களில் சுய கட்டுப்பாடு இன்றி அழுதல், அடம் பிடித்தால், மற்றவர்களுடன் பழக மறுத்தல்.

    8. பொருட்களை உடைத்தல்/ தூக்கி எறிதல்.

    9. இயற்கை உபாதையை கட்டுப்பாடு இன்றி இருக்கும் இடத்திலேயே கழித்தல்.

    10. 1 வயதில் பேசிய குழந்தை 1 வயது முதல் பேசாமல் இருத்தல்.

    11. வயதுக்கேற்ற புரிதல், பேசுதல் இல்லாமல் இருத்தல்.

    12. தனியாக அர்த்தமற்ற வார்த்தைகளால் பேசுதல் அல்லது கத்துதல்.

    இது போன்ற செயல்களை நாம் வீட்டில் கவனித்தால் உடனடியாக இதற்கான பயிற்சியை கொடுக்க வேண்டும். பள்ளி செல்லும் பிள்ளைகளிடம் கவனிக்க வேண்டியவை.

    1. பள்ளியில் ஓரிடத்தில் அமராமல் சுற்றித்திரிதல்.

    2. தான் கொண்டு சென்ற பொருட்களை தொலைத்து விடுதல்.

    3. சரியாக புரிந்து கொள்ளாமல் இருத்தல்.

    4. கையெழுத்து சரியாக இல்லாமல் இருத்தல்.

    5. கவனக்குறைவுடன் இருத்தல்.

    6. (spelling mistake) எழுத்துப்பிழை உடன் எழுதுதல்.

    7. மற்ற குழந்தைகளுடன் ஒத்துக் போகாமல் இருத்தல்.

    8. home work சரியாக செய்யாமல் இருத்தல்.

    9. வயதுக்கேற்ற பேச்சு இல்லாமல் இருத்தல்.

    10. படித்ததை எளிதில் மறந்து விடுதல்.

    11. (board copy) கரும் பலகையை பார்த்து எழுதாமல் இருத்தல்.

    இது போன்ற பிரச்சினைகளை உங்கள் குழந்தைகளிடத்தில் இருந்தால் உடனடியாக  மருத்துவரை தொடர்பு கொண்டு பயன் பெறுங்கள்.
    Next Story
    ×