search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    நெல்லையப்பர் கோவிலில் தைப்பூச விழா தொடங்கியது
    X

    நெல்லையப்பர் கோவிலில் தைப்பூச விழா தொடங்கியது

    நெல்லை நெல்லையப்பர் கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் முக்கியமான தைப்பூச திருவிழா சிறப்பு பூஜையுடன் தொடங்கியது.
    நெல்லை நெல்லையப்பர் கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் தைப்பூச திருவிழாவும் முக்கியமானது. இந்த ஆண்டுக்கான தைப்பூச திருவிழா நேற்று காலையில் சிறப்பு பூஜையுடன் தொடங்கியது. 

    கும்பாபிஷேகம் நடைபெறுவதையொட்டி கோவிலில் பாலாலயம் செய்யப்பட்டு உள்ளதால் கொடியேற்றம் நடக்கவில்லை. 4-ம் திருவிழாவான வருகிற 25-ந்தேதி (வியாழக்கிழமை) மதியம் 12 மணிக்கு நடைபெறக்கூடிய நெல்லுக்கு வேலியிட்ட திருவிளையாடல் வைபவமும் கிடையாது. ஆனால் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடக்கிறது. 

    31-ந்தேதி தைப்பூச திருவிழாவன்று தீர்த்தவாரி திருவிழா சுவாமி, அம்பாள் இருப்பிடத்தில் வைத்தே அபிஷேகமும், அலங்கார தீபாராதனையும் நடக்கிறது. 1-ந்தேதி சவுந்திரசபா மண்டபத்தில் நடைபெறக்கூடிய நடராஜர் திருநடன காட்சி கிடையாது. ஆனால், சுவாமி, அம்பாளுக்கு இருப்பிடத்தில் வைத்தே அபிஷேகமும், அலங்கார தீபாராதனையும் நடக்கிறது.
    Next Story
    ×