என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
நெல்லையப்பர் கோவிலில் தைப்பூச விழா தொடங்கியது
Byமாலை மலர்23 Jan 2018 8:19 AM GMT (Updated: 23 Jan 2018 8:19 AM GMT)
நெல்லை நெல்லையப்பர் கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் முக்கியமான தைப்பூச திருவிழா சிறப்பு பூஜையுடன் தொடங்கியது.
நெல்லை நெல்லையப்பர் கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் தைப்பூச திருவிழாவும் முக்கியமானது. இந்த ஆண்டுக்கான தைப்பூச திருவிழா நேற்று காலையில் சிறப்பு பூஜையுடன் தொடங்கியது.
கும்பாபிஷேகம் நடைபெறுவதையொட்டி கோவிலில் பாலாலயம் செய்யப்பட்டு உள்ளதால் கொடியேற்றம் நடக்கவில்லை. 4-ம் திருவிழாவான வருகிற 25-ந்தேதி (வியாழக்கிழமை) மதியம் 12 மணிக்கு நடைபெறக்கூடிய நெல்லுக்கு வேலியிட்ட திருவிளையாடல் வைபவமும் கிடையாது. ஆனால் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடக்கிறது.
31-ந்தேதி தைப்பூச திருவிழாவன்று தீர்த்தவாரி திருவிழா சுவாமி, அம்பாள் இருப்பிடத்தில் வைத்தே அபிஷேகமும், அலங்கார தீபாராதனையும் நடக்கிறது. 1-ந்தேதி சவுந்திரசபா மண்டபத்தில் நடைபெறக்கூடிய நடராஜர் திருநடன காட்சி கிடையாது. ஆனால், சுவாமி, அம்பாளுக்கு இருப்பிடத்தில் வைத்தே அபிஷேகமும், அலங்கார தீபாராதனையும் நடக்கிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X