search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சோலைமலை முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
    X

    சோலைமலை முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

    முருகப்பெருமானின் ஆறாவது படையாக விளங்கும் சோலைமலை முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    முருகப்பெருமானின் ஆறாவது படையாக விளங்கும் சோலைமலை முருகன் கோவில் அழகர்மலை உச்சியில் உள்ளது. இந்த கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் முக்கியமானது தைபூசத்திருவிழாவாகும். இந்த ஆண்டுக்கான விழா நேற்று காலை 9.45 மணிக்கு தங்க கொடிமரத்தில் மயில் உருவம் பொறிக்கப்பட்டு கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக கொடிமரம் நாணல் புல், வண்ண மலர்கள், நீண்ட மாலைகள், மாவிலை உள்ளிட்ட பொருட்களால் அலங்கரிக்கப்படிருந்தது.

    தொடர்ந்து மேள தாளம் முழங்க உற்சவர் முருகப்பெருமான், வள்ளி தெய்வானைக்கு விசேஷ பூஜைகள் நடந்தது. தொடர்ந்து மூலவர் சன்னதியில் சாமி சிறப்பு அலங்காரத்தில் காட்சி தந்தார். இதை ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் வந்து நெய்விளக்கேற்றி தரிசனம் செய்தனர்.

    மாலை பூதவாகனத்தில் சாமி புறப்பாடு நடைபெற்றது. இன்று (செவ்வாய்க்கிழமை) அன்னவாகனத்திலும், நாளை (புதன்கிழமை) காமதேனு வாகனத்திலும், 25-ந்தேதி ஆட்டுகிடாய் வாகனத்திலும், 26-ந்தேதி பூச்சப்பரத்திலும், 27-ந்தேதி யானை வாகனத்திலும், 28-ந்தேதி பல்லக்கிலும், 29-ந்தேதி குதிரை வாகனத்திலும், 30-ந்தேதி தங்க தேரோட்டத்திலும், சோலைமலை முருகப்பெருமான் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

    31-ந்தேதி தைப்பூசத்தையொட்டி வெள்ளிமயில் வாகனத்தில் சாமி எழுந்தருளுகிறார். விழாவையொட்டி தினமும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், நிர்வாக அதிகாரி மாரிமுத்து உள்பட திருக்கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
    Next Story
    ×