என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
நாங்குநேரி வானமாமலை பெருமாள் கோவில் தெப்பத்திருவிழா
Byமாலை மலர்22 Jan 2018 3:22 AM GMT (Updated: 22 Jan 2018 3:22 AM GMT)
நெல்லை மாவட்டம் நாங்குநேரி வானமாமலை பெருமாள் கோவிலில் இந்த ஆண்டுக்கான தெப்பத்திருவிழா கடந்த 2 நாட்களாக தெப்பத்திருவிழா நடந்தது.
நெல்லை மாவட்டம் நாங்குநேரி வானமாமலை பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் தெப்பத்திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான தெப்பத்திருவிழா கடந்த 12-ந் தேதி தொடங்கியது.
விழா நாட்களில் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனைகள் மற்றும் எண்ணெய் காப்பு பூஜை நடந்தது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக கிருஷ்ணன் கோவில் அருகே உள்ள தெப்பத்தில் கடந்த 2 நாட்களாக தெப்பத்திருவிழா நடந்தது.
விழாவையொட்டி வரமங்கை தாயார், மணவாள மாமுனி ஆகிய தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனைகள் நடந்தது. அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் பெருமாள், தாயாருடன் எழுந்தருளி 11 முறை வலம் வந்தனர். இதில் நாங்குநேரி மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்துகொண்டு, சாமி தரிசனம் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X