search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    வீட்டில் சனீஸ்வரரை வைத்து வழிபாடு செய்யலாமா?
    X

    வீட்டில் சனீஸ்வரரை வைத்து வழிபாடு செய்யலாமா?

    நவகிரகங்களின் ஒன்றான சனீஸ்வரனின் படம் மற்றும் சிலைகளை வீட்டில் வைத்து வழிபாடு செய்தால், அது நமக்கு நற்பலன்களைக் கொடுக்காது என்று சாஸ்திரம் கூறுகிறது.
    சனீஸ்வரன் என்றாலே மக்கள் அனைவருக்கும் அச்சம் தான். அதற்கு அவரது பார்வை தான் காரணம். சனி பகவான் நீதிமான். இவர் எப்போதும் தேவர், மனிதர் உள்ளிட்ட அனைத்து உயிர்களையும் எப்போதும் கவனித்தவாறு நன்கு பார்த்துக்கொண்டே இருப்பார் என்பது சாஸ்திர உண்மையாகும்.

    இவர் குற்றங்கள் புரிபவர்களையும், தெரிந்தே பாவங்கள் செய்பவர்களையும், அகந்தை மற்றும் அகங்காரத்துடன் நடப்பவர்களையும் தண்டிக்காமல் விடமாட்டார்.

    வீட்டில் சனீஸ்வரனின் படத்தை வைத்து வழிபாடு செய்யக் கூடாது. ஏனெனில் நவகிரகங்களில் ஒருவர் தான் சனைச்சரன் அதாவது சனீஸ்வரர்.

    சனைச்சரன் என்பது மருவி சனீஸ்வரன் என்றானது. சனைச்சரன் என்றால் மெதுவாக நகர்பவன் என்று அர்த்தம். நவகிரகங்கள் என்பவர்கள் கடவுள் கூறிய பணியை செய்யும் வேலையாட்கள். அதனால் ஆலயத்தில் கூட நவகிரகங்களை பரிவார தேவதைகளாகத் தான் பிரதிஷ்டை செய்கிறார்கள்.

    எனவே சனீஸ்வரர், ராகு, கேது, குரு, சுக்கிரன் உள்பட எந்தக் கோள்களையும் வீட்டில் வைத்து வணங்கக் கூடாது.

    நவகிரகங்களின் ஒன்றான சனீஸ்வரனின் படம் மற்றும் சிலைகளை வீட்டில் வைத்து வழிபாடு செய்தால், அது நமக்கு நற்பலன்களைக் கொடுக்காது என்று சாஸ்திரம் கூறுகிறது.

    Next Story
    ×