search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ரெங்கநாச்சியார் வைகுண்ட ஏகாதசி விழா 9-ந்தேதி தொடங்குகிறது
    X

    ரெங்கநாச்சியார் வைகுண்ட ஏகாதசி விழா 9-ந்தேதி தொடங்குகிறது

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ரெங்கநாச்சியார் வைகுண்ட ஏகாதசி விழா 9-ந்தேதி தொடங்குகிறது. 10 நாட்கள் விழா நடைபெறும்.
    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தாயார் எனப்படும் ஸ்ரீரெங்க நாச்சியார் வைகுண்ட ஏகாதசி விழா வருகிற 9-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) தொடங்கி 18-ந்தேதி (வியாழக்கிழமை) வரை மொத்தம் 10 நாட்கள் நடைபெற உள்ளது. 9-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை முதல் 5 நாட்களுக்கு பகல் பத்து உற்சவம் தினமும் மாலை 6.30 மணிக்கு தாயார் சன்னதி மூலஸ்தானத்தில் நடைபெறும். இந்த 5 நாட்களும் மாலை 5 மணிக்கு மேல் மூலவர் சேவைக்கு அனுமதி கிடையாது. தாயார் புறப்பாடும் கிடையாது. மாலை 6.30 மணி முதல் 9 மணி வரை மூலஸ்தானத்தில் திருமொழி சேவித்தல் நடைபெறும்.

    14-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) முதல் 18-ந்தேதி (வியாழக்கிழமை) வரை 5 நாட்கள் ராப்பத்து உற்சவமாகும். 14-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை முடிய தினமும் மாலை 5 மணிக்கு ரெங்கநாச்சியார் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு மாலை 6 மணிக்கு திருவாய்மொழி மண்டபம் வந்தடைவார். இரவு 9.15 மணிக்கு வீணை வாத்தியத்துடன் மூலஸ்தானம் சென்றடைவார். 17-ந்தேதி (புதன்கிழமை) ரெங்கநாச்சியார் மாலை 5 மணிக்கு புறப்பட்டு 5.45 மணிக்கு திருவாய் மொழி மண்டபத்தை அடைவார். மாலை 6.15 மணி முதல் இரவு 8.15 மணி வரை ஹிரண்யவதம், அரையர் தீர்த்தம் ஸ்ரீசடகோபம் சாதித்தல் நடைபெறும். இரவு 9.30 மணிக்கு திருவாய்மொழி மண்டபத்தில் இருந்து புறப்பட்டு வீணை வாத்தியத்துடன் 1.30 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைவார்.

    18-ந்தேதி மாலை 5 மணிக்கு ரெங்கநாச்சியார் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு திருவாய்மொழி மண்டபத்தை அடைவார். இரவு 11 மணிக்கு படிப்பு கண்டருளி மூலஸ்தானத்தை சென்றடைவார்.

    இந்த தகவலை ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் இணை ஆணையர் ஜெயராமன் தெரிவித்து உள்ளார்.
    Next Story
    ×