search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கிரிவலத்தை இந்த மாதமே தொடங்கலாம்
    X

    கிரிவலத்தை இந்த மாதமே தொடங்கலாம்

    மார்கழி மாதம் அதாவது இந்த மாதம் கிரிவலம் தொடங்குவதற்கு மிக, மிக ஏற்ற மாதமாகும். இந்த மாதத்தில் கிரிவலத்தை தொடங்குவதால் கிடைக்கும் பலனை பார்க்கலாம்.
    திருவண்ணாமலையில் இதுவரை கிரிவலம் செய்யாதவர்களுக்கு கிரிவலத்தைத் தொடங்க புதிய, நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. மார்கழி மாதம் அதாவது இந்த மாதம் கிரிவலம் தொடங்குவதற்கு மிக, மிக ஏற்ற மாதமாகும். மார்கழி மாதம் ஒரு நாள் கிரிவலம் வந்தால் ஒரு வருடம் தொடர்ந்து வலம் வந்த பயனை அடைவார்கள். வேண்டிய பலன்களைப் பெற்று, பின்னர் சிவலோகத்தை அடைவர்.

    அண்ணாமலையைக் கிரிவலம் செய்ய ஓரடி எடுத்து வைத்தால் அவர்கள் மனத்தினால் செய்த பாவங்கள் நீங்கி யாகங்கள் செய்த முழுப் பலனையும் அடைவார்கள். இரண்டடி எடுத்து வைத்தால் சொற்களால் செய்த பாவங்கள் யாவும் விலகி ராஜசூய யாகம் செய்த பலனைப் பெறலாம்.

    மூன்றடி எடுத்து வைத்தால் உடலினால் செய்த தீமைகள் யாவும் அடியோடு நீங்கும். சகல தீர்த்தங்களிலும் தீர்த்தமாடிய பலனைத் தரும். நான்கடி எடுத்து வைத்தால் மனம் சொல் உடம்பால் செய்த தீவினைகள் அகன்று, அஷ்டாங்க யோகங்கள் செய்த பலன்கள் கிடைக்கும்.

    அக்னி மலையாகிய அண்ணாமலையை வலம் வந்தவர்களின் பாதத்துகள் தீய இடங்களைப் தூய்மைப் படுத்திப் பரிசுத்தமாக்கும். அப்பாதத் துகள் ஒன்று மனிதர் மீது பட்டால் அதன் பலன் அவனது பிறப்பு இறப்பை ஒழிக்கும். பக்தர்கள் எப்பயனை வேண்டி அண்ணாமலையைக் கிரிவலம் வந்தாலும் அண்ணாமலை அப்பயனைக் கொடுத்து, அதற்கு மேலும் கொடுக்கும். வீடு பேற்றையும் கொடுக்கும்.
    Next Story
    ×