என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
காளஹஸ்தி கோவில் தங்க மயமாகிறது
பஞ்ச பூதத் தலங்களில் வாயு தலமாக விளங்குவது காளஹஸ்தி கோவில்.
இங்குள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீகாளஹஸ்தீஸ் வரர் கோவிலுக்கு தரிசனம் செய்யவும், ராகு-கேது பரிகார பூஜை செய்யவும் நாள்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகின்றனர்.
இக்கோவிலில் கடந்த பிப்ரவரி மாதம் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி அப்போது கோவில் பிரகாரத்தில் உள்ள ஞானப் பிரசுனாம்பிகை அம்மன் சந்நிதி, காளஹஸ்தீஸ்வரர் சந்நிதி, கோவில் கொடிமரங்கள் ஆகியவற்றுக்கு ரூ.16 கோடி செலவில் செப்புதகடுகள் பொருத்தப்பட்டு தங்க முலாம் பூசப்பட்டன.
காளஹஸ்தியில் வருகிற பிப்ரவரி மாதம் மகா சிவராத்திரி வருடாந்திர பிரம்மோற்சவம் நடைபெறவுள்ளது.
அதற்கு முன்பாக கோவிலில் உள்ள மற்ற கொடிமர பீடங்கள், பலி பீடங்கள், மண்டப தூண் வளைவுகளில் உள்ள கூம்புகள் ஆகியவற்றுக்கு செப்புத் தகடுகள் பொருத்தி தங்க முலாம் பூச அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
தற்போது அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிக்கு பக்தர்கள் நன்கொடைகளை அளித்து வருகின்றனர்.
இந்தப் பணிகள் நிறைவடைந்தவுடன் காளஹஸ்தீஸ்வரர் கோவில் முழுவதுமாக தங்கமயமாகக் காட்சியளிக்கும். இந்த பணியை பக்தர்கள் வரவேற்றுள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்