search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தபோது எடுத்த படம்.
    X
    மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தபோது எடுத்த படம்.

    மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் வலிய படுக்கை பூஜை

    குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் வலியபடுக்கை பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
    குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றான மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் வலிய படுக்கை பூஜை ஆண்டுக்கு 3 முறை நடைபெறுவது வழக்கம். அதாவது மாசிக்கொடை விழாவின் 6-ம் நாள் திருவிழாவன்றும், பரணி கொடை விழாவன்றும், கார்த்திகை மாத கடைசி வெள்ளிக்கிழமை அன்றும் நடைபெறும்.

    இந்த நிலையில் கார்த்திகை மாத கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி நேற்று நள்ளிரவு வலிய படுக்கை பூஜை நடந்தது. இதையொட்டி நேற்று அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு பஞ்சாபிஷேகம், தீபாராதனை ஆகியவை நடந்தது. பகல் 1 மணிக்கு உச்சகால பூஜையும், அன்னதானமும் நடைபெற்றது. மாலையில் சாயரட்சை தீபாராதனையும், இரவில் அத்தாழ பூஜை, அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி வருதல் ஆகியன நடந்தன.

    நள்ளிரவு 12 மணிக்கு வலியபடுக்கை பூஜை நடந்தது. பூஜையின்போது அம்மனுக்கு பல்வேறு வகையான உணவு பதார்த்தங்கள் படைக்கப்பட்டு தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனர்.
    Next Story
    ×