என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நெல்லையப்பர் கோவிலில் பாலாலய விழா
Byமாலை மலர்1 Dec 2017 5:28 AM GMT (Updated: 1 Dec 2017 5:28 AM GMT)
நெல்லையப்பர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பாலாலய விழா நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
பிரசித்தி பெற்ற நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் கடந்த 2004-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. ஆகம விதிப்படி 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடத்த வேண்டும். அதன்படி 12 ஆண்டுகள் நிறைவு பெறுவதையொட்டி திருப்பணிகள் நடத்தி கும்பாபிஷேகம் நடத்த இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
திருப்பணி தொடங்குவதற்காக நெல்லையப்பர், காந்திமதி அம்பாள் ராஜகோபுரம், விமானம் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு நேற்று முன்தினம் யாகசாலை பூஜை நடந்தது. கோவில் வளாகத்தில் கணபதி ஹோமம் வளர்க்கப்பட்டது.
நேற்று காலை நெல்லையப்பர் கோவிலில் பாலாலய விழா நடந்தது. இதையொட்டி கோவில் வளாகத்தில் உள்ள நின்ற சீர் நெடுமாறன் கலையரங்கம் முன்பு விக்னேசுவர பூஜை, 2-ம் கால யாகசாலை பூஜை நடந்தது. தொடர்ந்து சோமவார மண்டபத்தில் பரிவார மூர்த்திகளுக்கு பாலாலய கும்பாபிஷேகம் நடந்தப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையாளர் பரஞ்ஜோதி, உதவி ஆணையாளர் சாத்தையா, கோவில் செயல் அலுவலர் ரோஷினி, கோவில் பணியாளர்கள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X