என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
பழனி கோவிலில் கார்த்திகை தீப திருவிழா 26-ந்தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்குகிறது
Byமாலை மலர்21 Nov 2017 5:21 AM GMT (Updated: 21 Nov 2017 5:22 AM GMT)
பழனி முருகன் கோவிலில் திருக்கார்த்திகை தீப திருவிழா வருகிற 26-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்குகிறது.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனியில் திருக்கார்த்திகை தீப திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா வருகிற 26-ந் தேதி மாலை சாயரட்சை பூஜையில் காப்புகட்டுதலுடன் தொடங்குகிறது. 7 நாட்கள் நடக்கும் இந்த
விழாவில் தினசரி மாலை 5.30 மணிக்கு சாயரட்சை பூஜை, 6 மணிக்கு சண்முகார்ச்சனை, 6.30 மணிக்கு சண்முகர் தீபாராதனை, 6.45 மணிக்கு சின்னக்குமாரர்
தங்க சப்பரத்தில் புறப்பாடும், இரவு 7 மணிக்கு யாகசாலையில் தீபாராதனையும், 7.30 மணிக்கு தங்கரதத்தில் சுவாமி புறப்பாடும் நடைபெறும்.
6-ம் நாளான அடுத்த மாதம் (டிசம்பர்) 1-ந் தேதி மூலவர் சன்னதியில் பரணி தீபம் ஏற்றப்படும். அடுத்த நாள் மலைக்கோவிலில் திருக்கார்த்திகை தீபம் ஏற்றும்
நிகழ்ச்சியும், அன்றைய தினம் மாலையில் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சியும் நடைபெறும். திருக்கார்த்திகை தீப திருவிழா நடைபெறுவதால் டிசம்பர் 2-ந்
தேதி தங்கரத புறப்பாடு நிறுத்தப்படும் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் மேனகா மற்றும் கோவில் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.
அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா வருகிற 26-ந் தேதி மாலை சாயரட்சை பூஜையில் காப்புகட்டுதலுடன் தொடங்குகிறது. 7 நாட்கள் நடக்கும் இந்த
விழாவில் தினசரி மாலை 5.30 மணிக்கு சாயரட்சை பூஜை, 6 மணிக்கு சண்முகார்ச்சனை, 6.30 மணிக்கு சண்முகர் தீபாராதனை, 6.45 மணிக்கு சின்னக்குமாரர்
தங்க சப்பரத்தில் புறப்பாடும், இரவு 7 மணிக்கு யாகசாலையில் தீபாராதனையும், 7.30 மணிக்கு தங்கரதத்தில் சுவாமி புறப்பாடும் நடைபெறும்.
6-ம் நாளான அடுத்த மாதம் (டிசம்பர்) 1-ந் தேதி மூலவர் சன்னதியில் பரணி தீபம் ஏற்றப்படும். அடுத்த நாள் மலைக்கோவிலில் திருக்கார்த்திகை தீபம் ஏற்றும்
நிகழ்ச்சியும், அன்றைய தினம் மாலையில் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சியும் நடைபெறும். திருக்கார்த்திகை தீப திருவிழா நடைபெறுவதால் டிசம்பர் 2-ந்
தேதி தங்கரத புறப்பாடு நிறுத்தப்படும் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் மேனகா மற்றும் கோவில் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X