என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
ஸ்ரீரங்கம் கோவிலில் திருக்கார்த்திகையை முன்னிட்டு முகூர்த்தக்கால் நடும் விழா 23-ந்தேதி நடக்கிறது
Byமாலை மலர்18 Nov 2017 6:58 AM GMT (Updated: 18 Nov 2017 6:58 AM GMT)
பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம் கோவிலில் திருக்கார்த்திகையை முன்னிட்டு முகூர்த்தக்கால் நடும் விழா வருகிற 23-ந்தேதி நடக்கிறது.
பூலோக வைகுண்டம் என்றும், பெரிய கோவில் என்றும் போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் அடுத்த மாதம் (டிசம்பர்) 3-ந்தேதி திருக்கார்த்திகை திருநாள் நடக்கிறது. அன்று இரவு 8.30 மணிக்கு கோவிலில் சொக்கப்பனை நிகழ்ச்சி நடக்கிறது. முன்னதாக அன்று காலை 8 மணிக்கு நம்பெருமாள் புறப்பாடு கண்டருளி, சக்கரத்தாழ்வார் சன்னதி முன்பு எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்கிறது.
பின்னர் கார்த்திகை கோபுரவாயில் முன்பு 20 அடி உயர தென்னை மரத்தில் 15 அடி சுற்றளவுடன் பனை மட்டைகளால் வேயப்பட்ட சொக்கப்பனையில் நம்பெருமாளிடம் இருந்து பந்தத்தில் தீபம் ஏற்றி வைக்கப்படும். ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த சொக்கப்பனை நிகழ்ச்சியை தரிசிப்பதன் மூலம் இருள் நீங்கி பிரகாசமான வாழ்வு அமைய பெறுவது இத்திருநாளின் சிறப்பு அம்சமாகும்.
அதன்படி அன்று காலை 7.30 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பாடு நடக்கிறது. 8 மணிக்கு சந்தனு மண்டபம் சேர்தல் நடக்கிறது. பின்னர் இரவு 8 மணிக்கு 2-ம் புறப்பாடும் நடக்கிறது. பின்னர் இரவு 10.15 மணிக்கு மூலஸ்தானம் சேர்தல் நடக்கிறது. அன்று மாலை 4.15 மணிக்கு மேல் மூலவர் சேவை கிடையாது. திருக்கார்த்திகையை முன்னிட்டு வருகிற 23-ந்தேதி (வியாழக்கிழமை) காலை 10.30 மணிக்கு மேல் 11.15 மணிக்குள் மகர லக்கனத்தில் முகூர்த்தக்கால் நடும் விழா நடக்கிறது.
பின்னர் கார்த்திகை கோபுரவாயில் முன்பு 20 அடி உயர தென்னை மரத்தில் 15 அடி சுற்றளவுடன் பனை மட்டைகளால் வேயப்பட்ட சொக்கப்பனையில் நம்பெருமாளிடம் இருந்து பந்தத்தில் தீபம் ஏற்றி வைக்கப்படும். ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த சொக்கப்பனை நிகழ்ச்சியை தரிசிப்பதன் மூலம் இருள் நீங்கி பிரகாசமான வாழ்வு அமைய பெறுவது இத்திருநாளின் சிறப்பு அம்சமாகும்.
அதன்படி அன்று காலை 7.30 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பாடு நடக்கிறது. 8 மணிக்கு சந்தனு மண்டபம் சேர்தல் நடக்கிறது. பின்னர் இரவு 8 மணிக்கு 2-ம் புறப்பாடும் நடக்கிறது. பின்னர் இரவு 10.15 மணிக்கு மூலஸ்தானம் சேர்தல் நடக்கிறது. அன்று மாலை 4.15 மணிக்கு மேல் மூலவர் சேவை கிடையாது. திருக்கார்த்திகையை முன்னிட்டு வருகிற 23-ந்தேதி (வியாழக்கிழமை) காலை 10.30 மணிக்கு மேல் 11.15 மணிக்குள் மகர லக்கனத்தில் முகூர்த்தக்கால் நடும் விழா நடக்கிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X