என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நடை திறப்பு 1 மணி நேரம் அதிகரிப்பு
Byமாலை மலர்13 Nov 2017 5:45 AM GMT (Updated: 13 Nov 2017 5:46 AM GMT)
ஐயப்ப பக்தர்கள் வசதிக்காக கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் வருகிற 17-ந் தேதி முதல் நடை திறப்பு 1 மணி நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரியில் முக்கிய சீசன் காலமான நவம்பர், டிசம்பர், ஜனவரி ஆகிய 3 மாதங்களில் ஐயப்ப பக்தர்கள் அதிகளவு வருவார்கள். இவர்கள் அதிகாலையில் சூரிய உதயத்தை பார்த்து விட்டு, முக்கடல் சங்கமத்தில் புனித நீராடுவார்கள். பின்னர், பகவதி அம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்வார்கள்.
மேலும், டிசம்பர் மாதம் பள்ளி அரையாண்டு தேர்வு விடுமுறை, ஜனவரி மாதம் பொங்கல் தொடர் விடுமுறையையொட்டி கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதும்.
இதைதொடர்ந்து, கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் பக்தர்கள் வசதிக்காக வருகிற 17-ந் தேதி முதல் நடை திறப்பு நேரம் ஒரு மணி நேரம் அதிகரிக்கப்படுகிறது. வழக்கமாக அதிகாலை 4.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்படும். பகல் 12.30 மணிக்கு நடை மூடப்படும். மீண்டும் மாலை 4 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 8.30 மணிக்கு அடைக்கப்படும்.
வருகிற 17-ந் தேதி முதல் பகல் 12.30 மணிக்கு மாறாக 1 மணிக்கு நடை அடைக்கப்படும். அதுபோல், இரவு 8.30 மணிக்கு பதிலாக 9 மணிக்கு நடை அடைக்கப்படும். இதன்மூலம் கோவில் நடை கூடுதலாக ஒரு மணி நேரம் திறந்திருக்கும்.
மேலும், குமரி மாவட்டத்தில் உள்ள பிற கோவில் பணியாளர்கள் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் பணியமர்த்தப்படுவார்கள். இவர்களுக்கு சுழற்சி முறையில் பணி வழங்கப்படும். இதற்கான ஏற்பாடுகளை பகவதி அம்மன் கோவில் நிர்வாகத்தினர் மேற்கொண்டுள்ளனர்.
மேலும், டிசம்பர் மாதம் பள்ளி அரையாண்டு தேர்வு விடுமுறை, ஜனவரி மாதம் பொங்கல் தொடர் விடுமுறையையொட்டி கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதும்.
இதைதொடர்ந்து, கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் பக்தர்கள் வசதிக்காக வருகிற 17-ந் தேதி முதல் நடை திறப்பு நேரம் ஒரு மணி நேரம் அதிகரிக்கப்படுகிறது. வழக்கமாக அதிகாலை 4.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்படும். பகல் 12.30 மணிக்கு நடை மூடப்படும். மீண்டும் மாலை 4 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 8.30 மணிக்கு அடைக்கப்படும்.
வருகிற 17-ந் தேதி முதல் பகல் 12.30 மணிக்கு மாறாக 1 மணிக்கு நடை அடைக்கப்படும். அதுபோல், இரவு 8.30 மணிக்கு பதிலாக 9 மணிக்கு நடை அடைக்கப்படும். இதன்மூலம் கோவில் நடை கூடுதலாக ஒரு மணி நேரம் திறந்திருக்கும்.
மேலும், குமரி மாவட்டத்தில் உள்ள பிற கோவில் பணியாளர்கள் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் பணியமர்த்தப்படுவார்கள். இவர்களுக்கு சுழற்சி முறையில் பணி வழங்கப்படும். இதற்கான ஏற்பாடுகளை பகவதி அம்மன் கோவில் நிர்வாகத்தினர் மேற்கொண்டுள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X