search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பெருமாள் கோவிலில் கருட சேவை
    X

    பெருமாள் கோவிலில் கருட சேவை

    வள்ளியூர் சுந்தர பரிபூரண பெருமாள் கோவிலில் பெருமாள் பக்தர்கள் குழு ஆரம்பிக்கப்பட்டு 25 ஆண்டுகள் ஆனதை கொண்டாடும் வகையில் சிறப்பு கருடசேவை நிகழ்ச்சி நடைபெற்றது.
    வள்ளியூர் சுந்தர பரிபூரண பெருமாள் கோவிலில் பெருமாள் பக்தர்கள் குழு ஆரம்பிக்கப்பட்டு 25 ஆண்டுகள் ஆனதை கொண்டாடும் வகையில் சிறப்பு கருடசேவை நிகழ்ச்சி நடைபெற்றது. காலையில் கோபூஜை நடந்தது.

    மதியம் பெருமாள் மற்றும் ஆஞ்சநேயர் சுவாமிக்கு சிறப்பு அபிசேக பூஜை நடந்தது. பின்னர் கோவிலில் பக்தர்கள் தங்களின் வேண்டுதலை நெய்தீபம் ஏற்றி வழிபாடு செய்தனர். இரவில் சுந்தர பரிபூரண பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். அதனை தொடர்ந்து பெருமாள் நான்கு ரதவீதிகளில் உலா வந்தார்.

    பெண்களும், ஆண்களும் கோலாட்டம் ஆடியும், பஜனை பாடியும் ரதவீதிகளில் சென்றனர். நிகழ்ச்சியில் வள்ளியூர் மற்றும் சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
    Next Story
    ×