search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    வைகுண்ட ஏகாதசி: ஸ்ரீரங்கம் கோவிலில் பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நாளை நடக்கிறது
    X

    வைகுண்ட ஏகாதசி: ஸ்ரீரங்கம் கோவிலில் பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நாளை நடக்கிறது

    வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நாளை நடைபெறுகிறது.
    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா வருகிற டிசம்பர் மாதம் 18-ந் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கி ஜனவரி மாதம் 8-ந் தேதி வரை நடைபெறுகிறது. இதில் டிசம்பர் 19-ந் தேதி பகல் பத்து உற்வசம் தொடங்குகிறது. 28-ந் தேதி மோகினி அலங்காரமும், 29-ந் தேதி முக்கிய நிகழ்ச்சியான பரமபதவாசல் திறப்பும் நடைபெறுகிறது.

    ஜனவரி 4-ந் தேதி திருக்கைத்தல சேவையும், 5-ந் தேதி திருமங்கை மன்னன் வேடுபறி நிகழ்ச்சியும், 7-ந் தேதி தீர்த்தவாரியும், 8-ந் தேதி நம்மாழ்வார் மோட்சமும் நடைபெறுகிறது. இந்த விழாவையொட்டி ரெங்கநாதர் கோவிலில் ஆயிரங்கால் மண்டபம் அருகே பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நாளை(திங்கட்கிழமை) காலை 9.45 மணி முதல் 10.25 மணிக்குள் நடைபெறுகிறது.



    இந்த நிகழ்ச்சியின் போது ஆயிரங்கால் மண்டபத்தில் கோவில் அர்ச்சகர்கள் வேதங்கள் சொல்ல மேள, நாதஸ்வரங்கள் ஒலிக்க கோவில் யானை ஆண்டாள் ஆயிரங்கால் மண்டபத்திற்கு அருகில் உள்ள நாலுகால் மண்டபத்தில் நின்றபடி மரியாதை செலுத்தும். அப்போது முகூர்த்த பந்தக்காலில் புனிதநீர் ஊற்றி மஞ்சள், சந்தனம், மாவிலை மற்றும் மாலை அணிவிக்கப்பட்ட பின்னர் பந்தக்காலை கோவில் பணியாளர்கள் நடுவர்.

    இதையடுத்து ஆயிரங்கால் மண்டபம் அருகே கூடுதல் பந்தக்கால்கள் ஊன்றி திருக்கொட்டகை அமைக்கும் பணி நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் ஜெயராமன் மற்றும் கோவில் அலுவலர்கள், பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
    Next Story
    ×