என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
சுவாமிமலை முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா தொடக்கம்
Byமாலை மலர்21 Oct 2017 3:05 AM GMT (Updated: 21 Oct 2017 3:05 AM GMT)
ஆறுபடை வீடுகளில் 4-வது படைவீடான சுவாமிமலை முருகன் கோவிலில் இந்த ஆண்டுக்கான கந்த சஷ்டி விழா தொடங்கியது.
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே சுவாமிமலையில் உள்ள சுவாமிநாதசாமி கோவில் முருகனின் ஆறுபடை வீடுகளில் 4-வது படைவீடாக கருதப்படுகிறது. சிவபெருமானுக்கு ‘ஓம்’ எனும் மந்திரத்தை உபதேசம் செய்த தலமாக வழிபடப்படும் இக்கோவிலில் ஆண்டுதோறும் கந்தசஷ்டி விழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான கந்த சஷ்டி விழா நேற்று தொடங்கியது.
விழாவின் தொடக்கமாக நேற்று மலை கோவிலில் இருந்து வள்ளி-தெய்வானையுடன் சண்முகர் உற்சவர் மண்டபத்தில் எழுந்தருளினார். முன்னதாக நேற்றுமுன்தினம் விக்னேஸ்வர பூஜை நடந்தது. விழாவில் இன்று (சனிக்கிழமை) முதல் வருகிற 24-ந் தேதி வரை சாமி வீதி உலா நடக்கிறது.
வருகிற 25-ந் தேதி மாலை 6 மணிக்கு விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்காரம் நடக்கிறது. முன்னதாக காலை 10 மணிக்கு 108 சங்காபிஷேகம், மாலை 5 மணிக்கு சண்முகர் அம்மனிடம் சக்திவேல் வாங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
சூரசம்காரத்தை தொடர்ந்து சண்முகர் தங்கமயில் வாகனத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார். 26-ந் தேதி காவிரியில் தீர்த்தவாரியும், திருக்கல்யாணமும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.
விழாவின் தொடக்கமாக நேற்று மலை கோவிலில் இருந்து வள்ளி-தெய்வானையுடன் சண்முகர் உற்சவர் மண்டபத்தில் எழுந்தருளினார். முன்னதாக நேற்றுமுன்தினம் விக்னேஸ்வர பூஜை நடந்தது. விழாவில் இன்று (சனிக்கிழமை) முதல் வருகிற 24-ந் தேதி வரை சாமி வீதி உலா நடக்கிறது.
வருகிற 25-ந் தேதி மாலை 6 மணிக்கு விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்காரம் நடக்கிறது. முன்னதாக காலை 10 மணிக்கு 108 சங்காபிஷேகம், மாலை 5 மணிக்கு சண்முகர் அம்மனிடம் சக்திவேல் வாங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
சூரசம்காரத்தை தொடர்ந்து சண்முகர் தங்கமயில் வாகனத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார். 26-ந் தேதி காவிரியில் தீர்த்தவாரியும், திருக்கல்யாணமும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X