search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஆயுள் கூட்டும் தீபாவளி தீபம்
    X

    ஆயுள் கூட்டும் தீபாவளி தீபம்

    தீபாவளியன்று மாலை நேரத்தில் வீட்டிற்கு வருகை தரும் மகாலட்சுமியை விளக்குகள் ஏற்றி வைத்து வரவேற்க வேண்டும்.
    * கல்வியின் அதிபதியை வணங்க சரஸ்வதி பூஜை உகந்ததாக இருப்பதுபோல, செல்வத்தின் அதிபதியை வணங்க உகந்தது தீபாவளி எனும் லட்சுமி பூஜை என்பது ஐதீகம்.

    * தீபாவளியன்று மாலை நேரத்தில் வீட்டிற்கு வருகை தரும் மகாலட்சுமியை விளக்குகள் ஏற்றி வைத்து வரவேற்க வேண்டும்.

    * பாற்கடலில் அவதரித்த மகாலட்சுமி, மகாவிஷ்ணு வுக்கு மாலை அணிவித்து மார்பில் இடம் பிடித்த நாள் தீபாவளி ஆகும்.

    * தீபாவளியன்று வீடுகளில் நெய் தீபங்கள் ஏற்றி வைப்பதன் மூலம், செல்வ வளம் மற்றும் ஆயுள் விருத்தி ஆகிய நன்மைகள் ஏற்படுவதாகவும் ஐதீகம்.

    * அகல் விளக்குகளில், சரஸ்வதிக்காக 3 தீபங்கள், மகாலட்சுமிக்காக 3 தீபங்கள் மற்றும் அவரவரது குல தெய்வத்துக்காக 3 தீபங்கள் என்று மொத்தம் 9 தீபங்களை வீடுகளில் ஏற்றி வைத்து வழிபாடு செய்வது முறை.

    * கிழக்கு திசையில் தீபம் ஏற்றி வழிபட்டால் துன்பங்கள் அகலும்.

    * மேற்கு திசையில் தீபம் ஏற்றி வழிபட்டால் கடன் தொல்லை, சனி கிரக பாதிப்பு போன்றவை நீங்கும்.

    * வடக்கு திசையில் தீபம் ஏற்றி வழிபட்டால் செல்வமும், மங்களமும் பெருகும்.
    Next Story
    ×