என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
திருப்பரங்குன்றம் மலைமேல் குமரருக்கு வேல் எடுக்கும் திருவிழா நாளை நடக்கிறது
Byமாலை மலர்12 Oct 2017 6:57 AM GMT (Updated: 12 Oct 2017 6:57 AM GMT)
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள காசி விசுவநாதர் கோவிலில் இந்த ஆண்டிற்கான மலைமேல் குமரருக்கு வேல் எடுக்கும் திருவிழா நாளை(வெள்ளிக் கிழமை) நடக்கிறது.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள காசி விசுவநாதர் கோவில் வளாகத்தில் மலைமேல் குமரருக்கு தனி சன்னதி உள்ளது. இதன் வளாகத்தில் கங்கைக்கு நிகரான தீர்த்த குளம் உள்ளது. தெய்வீக புலவர் நக்கீரரின் பாவ விமோசனத்திற்காக முருகப்பெருமான் வேல்கொண்டு மலை பாறையை கீறி இந்த புனித தீர்த்தகுளத்தை உருவாக்கியதாக புராண வரலாறு கூறுகிறது.
இதை நினைவூட்டும்விதமாக ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் மலைமேல் குமரருக்கு வேல் எடுக்கும் திருவிழா நடத்தப்படுகிறது.
இந்த ஆண்டிற்கான திருவிழா நாளை(வெள்ளிக் கிழமை) நடக்கிறது. விழாவில் மதியம் 12 மணிக்கு தங்கவேலுக்கு பால், பன்னீர், இளநீர் உள்பட 16 வகையான அபிஷேகம் நடக்கிறது. பின்னர் முருகப்பெருமான் திருக்கரத்தில் உள்ள தங்கவேலை பூப்பல்லக்கில் வைத்து மலைமேல் குமரர் சன்னதிக்கு எடுத்து செல்வார்கள். இதையடுத்து அந்த தங்கவேலுக்கு தீர்த்தகுளத்தில் அபிஷேகம் செய்யப்படுகிறது.
இந்த தகவலை கோவில் துணை கமிஷனர் கவிதா பிரியதர்ஷினி தெரிவித்துள்ளார்.
இதை நினைவூட்டும்விதமாக ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் மலைமேல் குமரருக்கு வேல் எடுக்கும் திருவிழா நடத்தப்படுகிறது.
இந்த ஆண்டிற்கான திருவிழா நாளை(வெள்ளிக் கிழமை) நடக்கிறது. விழாவில் மதியம் 12 மணிக்கு தங்கவேலுக்கு பால், பன்னீர், இளநீர் உள்பட 16 வகையான அபிஷேகம் நடக்கிறது. பின்னர் முருகப்பெருமான் திருக்கரத்தில் உள்ள தங்கவேலை பூப்பல்லக்கில் வைத்து மலைமேல் குமரர் சன்னதிக்கு எடுத்து செல்வார்கள். இதையடுத்து அந்த தங்கவேலுக்கு தீர்த்தகுளத்தில் அபிஷேகம் செய்யப்படுகிறது.
இந்த தகவலை கோவில் துணை கமிஷனர் கவிதா பிரியதர்ஷினி தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X