என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
சரநாராயண பெருமாள் கோவிலில் ஏகதின பிரம்மோற்சவம் இன்று நடக்கிறது
Byமாலை மலர்5 Oct 2017 5:13 AM GMT (Updated: 5 Oct 2017 5:13 AM GMT)
பண்ருட்டி திருவதிகை சரநாராயணபெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் ஏகதின பிரம்மோற்சவம் இன்று (வியாழக்கிழமை) நடக்கிறது.
பண்ருட்டி திருவதிகை சரநாராயணபெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் ஏகதின பிரம்மோற்சவம் வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவம் இன்று(வியாழக்கிழமை) நடக்கிறது. இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு சுப்ரபாத சேவை, 6 மணிக்கு தோமாலை சேவை, 7.30 மணிக்கு மேல் 8 மணிக்குள் கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது.
தொடர்ந்து காலை 8.15 மணிக்கு அம்ச வாகனத்திலும், 9 மணிக்கு சிம்ம வாகனத்திலும், 10 மணிக்கு அனுமந்த வாகனத்திலும், 11 மணிக்கு சேஷ வாகனத்திலும், 12 மணிக்கு கருட வாகனத்தில் என்று ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி சாமி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார். பின்னர் மாலை 6 மணிக்கு தேரோட்டம் நடைபெற இருக்கிறது. தொடர்ந்து 7 மணிக்கு தீர்த்தவாரி நடைபெற்று, விழா கொடியிறக்கம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இதையொட்டி மூலவர் சரநாராயண பெருமாள் திருமலை திருப்பதி மலையப்ப சாமி அலங்காரத்தில் நெய்தீப ஒளி அலங்காரத்திலும், மூலவர் ஹேமாம் புஜவல்லி தாயார் வெள்ளங்கி அலங்காரத்திலும் காட்சி அளிக்க இருக்கிறார்கள். இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.
தொடர்ந்து காலை 8.15 மணிக்கு அம்ச வாகனத்திலும், 9 மணிக்கு சிம்ம வாகனத்திலும், 10 மணிக்கு அனுமந்த வாகனத்திலும், 11 மணிக்கு சேஷ வாகனத்திலும், 12 மணிக்கு கருட வாகனத்தில் என்று ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி சாமி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார். பின்னர் மாலை 6 மணிக்கு தேரோட்டம் நடைபெற இருக்கிறது. தொடர்ந்து 7 மணிக்கு தீர்த்தவாரி நடைபெற்று, விழா கொடியிறக்கம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இதையொட்டி மூலவர் சரநாராயண பெருமாள் திருமலை திருப்பதி மலையப்ப சாமி அலங்காரத்தில் நெய்தீப ஒளி அலங்காரத்திலும், மூலவர் ஹேமாம் புஜவல்லி தாயார் வெள்ளங்கி அலங்காரத்திலும் காட்சி அளிக்க இருக்கிறார்கள். இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X