என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
வினைதீர்த்த விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
Byமாலை மலர்5 Oct 2017 4:18 AM GMT (Updated: 5 Oct 2017 4:18 AM GMT)
சிதம்பரம் அருகே பண்ணப்பட்டு கிராமத்தில் உள்ள வினை தீர்த்த விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
சிதம்பரம் அருகே பண்ணப்பட்டு கிராமத்தில் வினை தீர்த்த விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலில் திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் நடத்த அப்பகுதி மக்கள் முடிவு செய்தனர். அதன்படி திருப்பணிகள் நடைபெற்று வர்ணங்கள் பூசப்பட்டு கோவில் தற்போது புதுப்பொலிவுடன் காட்சி அளிக்கிறது.
இக்கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி கோவில் வளாகத்தில் யாகசாலை அமைக்கப்பட்டு நேற்று முன்தினம் விக்னேஷ்வர பூஜை, தொடர்ந்து வாஸ்துசாந்தி, நவக்கிரக ஹோமம், முதல்கால யாகசாலை பூஜை உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன.
இதையடுத்து நேற்று காலையில் 2-ம் கால யாகசாலை பூஜை, கோ பூஜை, பூர்ணாகுதி நடந்தது. இதையடுத்து யாகசாலையில் வைத்து பூஜை செய்யப்பட்ட புனித நீர் மேள, தாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு கோவில் கோபுர கலசத்தில் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.
தொடர்ந்து கருவறையில் உள்ள கற்பக விநாயகர், சுப்பிரமணியர் ஆகிய சாமிகளுக்கும் புனித நீர் ஊற்றப்பட்டது. இதில் சிதம்பரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.
இக்கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி கோவில் வளாகத்தில் யாகசாலை அமைக்கப்பட்டு நேற்று முன்தினம் விக்னேஷ்வர பூஜை, தொடர்ந்து வாஸ்துசாந்தி, நவக்கிரக ஹோமம், முதல்கால யாகசாலை பூஜை உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன.
இதையடுத்து நேற்று காலையில் 2-ம் கால யாகசாலை பூஜை, கோ பூஜை, பூர்ணாகுதி நடந்தது. இதையடுத்து யாகசாலையில் வைத்து பூஜை செய்யப்பட்ட புனித நீர் மேள, தாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு கோவில் கோபுர கலசத்தில் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.
தொடர்ந்து கருவறையில் உள்ள கற்பக விநாயகர், சுப்பிரமணியர் ஆகிய சாமிகளுக்கும் புனித நீர் ஊற்றப்பட்டது. இதில் சிதம்பரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X