search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில் திருவடி சேவை
    X

    உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில் திருவடி சேவை

    உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில் திருவடி சேவை நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
    திருச்சி உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில் கடந்த 21-ந்தேதி நவராத்திரி உற்சவம் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழா நாட்களில் ஒவ்வொரு நாளும் மாலையில் தாயார் கமலவல்லி நாச்சியார் மூலதஸ்தானத்தில் புறப்பாடாகி கொலு மண்டபத்தில் எழுந்தருளுகிறார். நவராத்திரி உற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியான 5-ம் நாளான நேற்று திருவடி சேவை நடந்தது.

    இதனால் நேற்று மாலை 4.30 மணியளவில் தாயார் கமலவல்லி நாச்சியார் மூலஸ்தானத்தில் புறப்பாடாகி நவராத்திரி மண்டபத்துக்கு 5 மணிக்கு வந்தடைந்தார். பின்னர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர் களுக்கு காட்சியளித்தார். இதையடுத்து இரவு 9 மணி வரை பக்தர்களுக்கு தாயார் திருவடி சேவை அளித்தார். வருடத்திற்கு ஒரு முறை இந்த திருவடி சேவை நடப்பதால் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தாயாரை தரிசனம் செய்தனர். வருகிற 29-ந்தேதி சரஸ்வதி பூஜையன்று தாயார் மாலையில் திருமஞ்சனம் கண்டருளுகிறார்.
    Next Story
    ×