search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருப்பதி கோவிலில் 27, 30-ந்தேதிகளில் திவ்ய தரிசனம் ரத்து
    X

    திருப்பதி கோவிலில் 27, 30-ந்தேதிகளில் திவ்ய தரிசனம் ரத்து

    திருப்பதியில் நாளை (புதன்கிழமை) நடைபெற உள்ள கருடசேவை நிகழ்ச்சியாலும், 30-ந்தேதி புரட்டாசி மாத 2-வது சனிக்கிழமை என்பதாலும் பக்தர்களுக்கான திவ்ய தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. அதையொட்டி நாளை (புதன்கிழமை) நடைபெற உள்ள கருட வாகன வீதிஉலா (கருடசேவை) நிகழ்ச்சியாலும், 30-ந்தேதி புரட்டாசி மாத 2-வது சனிக்கிழமை என்பதாலும் அலிபிரி மற்றும் ஸ்ரீவாரிமெட்டு ஆகிய இரு நடைபாதைகளில் பாத யாத்திரையாக வரும் பக்தர்களுக்கான திவ்ய தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது என்று திருமலை-திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
    Next Story
    ×