என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
திருஈங்கோய்மலை காவிரி ஆற்றில் மகா புஷ்கர விழா
Byமாலை மலர்23 Sep 2017 3:20 AM GMT (Updated: 23 Sep 2017 3:20 AM GMT)
தொட்டியம் அருகே திருஈங்கோய்மலை காவிரியாற்றில் மகா புஷ்கர விழா நடைபெற்றது.
கடந்த 12-ந்தேதியிலிருந்து காவிரி கரையோரப்பகுதிகளில் மகா புஷ்கர விழா நடைபெற்று வருகிறது. காவிரி ஆற்றில் பக்தர்கள் தீபம் ஏற்றி வழிபாடு செய்து புனித நீராடி வருகின்றனர். அதன்படி கடந்த 17-ந்தேதி தொட்டியம் அருகே உள்ள வரதராஜபுரம் கிராமத்தில் காவிரி கரையில் மகா புஷ்கர விழா நடைபெற்றது.
இதன் தொடர்ச்சியாக தொட்டியம் அருகே காவிரி ஆற்று கரையில் அமைந்துள்ள திருஈங்கோய்மலை லலிதாம்பிகை மடத்தின் சார்பில் மகா புஷ்கர விழா நடைபெற்றது. நிகழ்ச்சியை முன்னிட்டு லலிதாம்பிகை மடத்தை சேர்ந்த யோகினிகள் வித்யாம்பாள் சரஸ்வதி, சாம்பவி வித்யாம்பாள், ஜெயம்பாசரஸ்வதி, சிவசங்கரி அம்பா ஆகியோர் காவிரி பாதுகாப்புக்குழுவை சேர்ந்த ராமநாதசுவாமிகள், அப்பர் சுவாமிகள் முன்னிலையில் காவிரி ஆற்றில் புனித நீர் எடுத்து சிறப்பு வழிபாடுகளும், மழை வேண்டியும், உலக அமைதிக்காகவும் ஜீவராசிகள் இன்னலின்றி வாழ்ந்திடவும் பிரார்த்தனை நடைபெற்றது.
பூஜிக்கப்பட்ட புனித நீரை யோகினிகள் காவிரி ஆற்றில் அபிஷேகம் செய்து காவிரித்தாயை வழிபட்டனர். அதனை தொடர்ந்து ஆற்றில் பக்தர்கள் புனித நீராடினர். விழாவில் திருச்சி, முசிறி, தொட்டியம், நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து ஏராளமானோர் கலந்து கொண்டு புனித நீராடினர்.
இதன் தொடர்ச்சியாக தொட்டியம் அருகே காவிரி ஆற்று கரையில் அமைந்துள்ள திருஈங்கோய்மலை லலிதாம்பிகை மடத்தின் சார்பில் மகா புஷ்கர விழா நடைபெற்றது. நிகழ்ச்சியை முன்னிட்டு லலிதாம்பிகை மடத்தை சேர்ந்த யோகினிகள் வித்யாம்பாள் சரஸ்வதி, சாம்பவி வித்யாம்பாள், ஜெயம்பாசரஸ்வதி, சிவசங்கரி அம்பா ஆகியோர் காவிரி பாதுகாப்புக்குழுவை சேர்ந்த ராமநாதசுவாமிகள், அப்பர் சுவாமிகள் முன்னிலையில் காவிரி ஆற்றில் புனித நீர் எடுத்து சிறப்பு வழிபாடுகளும், மழை வேண்டியும், உலக அமைதிக்காகவும் ஜீவராசிகள் இன்னலின்றி வாழ்ந்திடவும் பிரார்த்தனை நடைபெற்றது.
பூஜிக்கப்பட்ட புனித நீரை யோகினிகள் காவிரி ஆற்றில் அபிஷேகம் செய்து காவிரித்தாயை வழிபட்டனர். அதனை தொடர்ந்து ஆற்றில் பக்தர்கள் புனித நீராடினர். விழாவில் திருச்சி, முசிறி, தொட்டியம், நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து ஏராளமானோர் கலந்து கொண்டு புனித நீராடினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X