search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஸ்ரீராமர் கடைபிடித்த நவராத்திரி பூஜை
    X

    ஸ்ரீராமர் கடைபிடித்த நவராத்திரி பூஜை

    ஸ்ரீராமர் மனைவி சீதையை மீட்க நவராத்திரியில் அம்பிகையை முறையாக வணங்கி விரதம் இருக்குமாறு நாரதர் கூறினார்.
    ஸ்ரீராம பிரான் வனவாசம் சென்ற சமயத்தில் தன் மனைவியை இழந்தான். கடல் கடந்து சென்று சீதையை எவ்வாறு மீட்பது என்று ஏங்கினான். அதனை உணர்ந்த நாரதர் ஸ்ரீராமா! நவராத்திரியில் அம்பிகையை முறையாக வணங்கினால் சீதையை மீட்பதற்கான அருள் கிட்டும் என எடுத்துக்கூறினார். அதோடு நாரதரே ஸ்ரீராமருக்கு குருவாய் இருந்து மாலியவான் மலையில் நவராத்திரி பூஜையினை உபதேசித்தார்.

    ஸ்ரீராமரும் மாலியவான் மலையில் நாரதர் முன் அம்பிகைக்கு நவராத்திரி பூஜை செய்து, தன்னை மறந்து அம்பிகையின் நினைவால் மந்திரத்தை ஓதினார்.
    ஸ்ரீராமரின் பூஜைக்கு மகிழ்ந்த அன்னை, ஸ்ரீராமருக்கு மாலியவான் மலையில் சிம்ம வாகனத்தில் காட்சிளித்தான். பிறகு அவன், ஸ்ரீராமா! உனக்குத் துணையிருப்போர் அனைவரும் வெறும் வானரர் (குரங்கு) அல்ல. தேவர்கள் என்று அறிவாய்! உனக்கு அனைத்தும் அளித்தோம். வெற்றி கொள்வாய்! என்று அருளி மறைந்தாள்.

    ராம - ராவண யுத்தம் நடந்தது. யுத்தத்தில் ராவணன் தன்னிடம் உள்ள அனைத்து ஆயுதங்களையும் இழந்தான். அனைத்தையும் இழந்த ராவணன் தன் குலதேவதை துர்க்கையை நினைத்து வணங்கினான். ராவணனுடைய இஷ்ட தேவதையும் துர்க்கையே.

    ராவணன் நினைத்த உடனேயே துர்க்கை அவன் முன் தோன்றினாள். ராவணன் துர்க்கையை வணங்கி, அன்னையே! நீ என் சாரதியாய் ஆக வேண்டும் என வேண்டினான். ராவணனின் பிரார்த்தனைக்கு ஏற்ப துர்க்கை அவன் தேரில் சாரதியாய் நின்றாள்.

    ‘கலியுகத்தில் தீயவர்களே அதிக பலம் பெறுவர். தனது பணத்தாலும், பதவியாலும், பலத்தாலும், ஆணவத்தாலும் தீயவரே அதிகமாயிருந்து நல்லவர்களைத் தளர்ச்சி அடையச் செய்வர் என்பதை உலகிற்கு எடுத்துக் காட்டவே துர்க்கை ராவணனுக்குச் சாரதியாய், 18 கைகளில் ஆயுதங்களை ஏந்தி நின்றாள்.

    இதைப் பார்த்த ஸ்ரீராமர் மனம் தளர்ந்தார். தனது கோதண்டத்தைக் கீழே போட்டு விட்டு தேவி! எனக் கதறித் துதித்தார்.



    எனினும், தேவி செவி சாய்க்கவில்லை. ஸ்ரீராமரை நோக்கித் தேரைச் செலுத்தினான்.

    இதைப் பார்த்த ஸ்ரீராமர் மிகவும் தவித்தார். வேறு வழி இல்லையே! என்று மீண்டும் மனமுருகி அன்னையைத் துதித்தார்.

    வெற்றி பெறுவாய் என நீதானே ஆசியளித்தாய். இப்போது அதற்கு நான் தகுதி இல்லையா, என்று ஸ்ரீராமர் கதறினார்.

    அன்னையே! உன்னை என் எதிரியின் தேரினில் சாரதியாய்ப் பார்ப்பதற்கா எனக்கு இரு கண்கள் இருக்கின்றன? அவற்றால் இனி என்ன பயன்? இப்போதே எனது இரண்டு கண்களையும் எடுத்து உனக்குக் காணிக்கையாக அளிக்கின்றேன் என்று தன் அம்புகளால் தன் கண்களை நோண்ட முற்பட்டார். இதனைக் கண்டதுமே அம்பிகையானவள் ராவணனின் தேரிலிருந்து மறைந்து விட்டாள்.

    ராவணன் பலகோடி யுகங்களாய் நவராத்திரி பூஜையினை விடாது செய்தவன். நவராத்திரி பூஜையை விடாது செய்த புண்ணிய பலத்திற்காக அம்பிகையானவள் சிறிது நேரம் சாரதியாய் அமர்ந்தாள்.

    பலநாள் தொடர்ந்து பூஜை செய்தாலும் அதர்மத்தின் வழிச் செல்பவனுக்குச் சிறிது நேரமே. ஆனால், தர்மத்தின் வழி செல்லும் ஸ்ரீராமன் மாலியவான் மலையில் ஒன்பது நாள் மட்டுமே செய்த பூஜையால் மனமகிழ்ந்த தேவி, ராவணன் தேரை விட்டு மறைந்து அவனை வெற்றி கொள்ளும் சக்தியையும் கொடுத்தாள்.
    இதனால் போரில் ராமர் வெற்றி பெற்றார்.
    Next Story
    ×