search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கொலு அமைக்கும் முறையும் நன்மையும்
    X

    கொலு அமைக்கும் முறையும் நன்மையும்

    திருமணமாகாத பெண்கள் இந்த கொலு பூஜையை நடத்தினால் அவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடுவதோடு நல்ல வரனாகவும் கிடைக்கும்.
    நவராத்திரி என்றால் கொலுதான் முக்கிய அம்சம் பெறுகிறது. கொலு வைப்பதற்கு சாமி பொம்மைகள் அவசியம் தேவை. குறிப்பாக பார்வதி, லட்சுமி, சரஸ்வதி ஆகியோ ரின் பொம்மைகள் கண்டிப்பாக இருக்க வேண்டும்.

    முழுமுதற் கடவுளான விநாயகர் பொம்மை இடம் பெறுவதும் சிறப்பு. அது மட்டுமின்றி பல்வேறு பொம் மைகளையும் கொலுவில் வைத்து அழகு படுத்தலாம். கடந்த வருடம் வாங்கிய பொம்மைகள் இதற்கு பயன் படுத்தலாம். மேலும் புதிய பொம்மைகளை வாங்கி வைக்கலாம்.

    சிலர் ஆண்டுக்கு ஒரு புது பொம்மையை வாங்கி வைப்பார்கள். வீட்டில் வைக்கப்படும் கொலு பல்வேறு அடுக்குகளாக இருக்கும். ஒற்றைப்படை எண்ணில் அந்த கொலு படி அமைக்க வேண்டும். சிலர் ஆண்டுக்கு 2 படி வீதம் கூட்டிக்கொண்டே அமைப்பார்கள்.

    கொலுவில் வைக்க பல்வேறு அம்சத்தை விளக்கும் வகையில் பொம்மைககள் வைப்பார்கள். விவசாயத்தின் வளர்ச்சியே நாட்டின் முன்னேற்றம். எனவே சிலர் வயல் வெளிகள் போன்ற பொம்மைகள் அமைத்து விவ சாயிகளுக்கு நன்றி செலுத்துவார்கள்.

    கொலு வைப்பவர்கள் அதற்கான ஏற்பாடுகளை இன்றே செய்ய வேண்டும். குறிப்பாக கொலு வைக்கும் அறையை வெள்ளை அடித்து தூய்மையாக்க வேண் டும். நல்ல நேரம் பார்த்து கொலு அமைக்க வேண்டும்.



    கொலு அமைக்க நாளை (புதன்கிழமை 20-ந் தேதி) நல்ல நாளாகும். நாளை காலை 9 மணி முதல் 11 மணிக்குள் உத்தர நட்சத்திரத்தில் செவ்வாய், சூரிய ஓரைகளில் கொலுவுக்கான கலச ஸ்தாபனம் செய்து பொம்மைகளை கொலு படிகளில் அமைக்கலாம். அல்லது சூரிய அஸ்தமனம் ஆன பின் இரவில் கொலு வைக்கலாம். கொலு வைக்கும் முன்னர் அருகில் உள்ள கோவிலுக்கு சென்று வழிபட்டு வருவது சிறப்பு.

    நவராத்திரி கொண்டாடும் நாட்களில் இரவில் பூஜை நடத்த வேண்டும். அப்போது சுமங்கலி பெண்களை அழைத்து அவர்களுக்கு வெற்றிலை, பாக்கு, பழம், குங்குமம் கொடுத்து அனுப்ப வேண்டும். வசதி படைத்தவர்கள் பரிசு பொருளும் கொடுக்கலாம். பரிசு பொருளில் குங்கும சிமிழ் இடம் பெறுவது நல்லது.
    கடைசி நாள் ஆயுத பூஜை அன்று பூஜையை சிறப்பாக நடத்தலாம். மறுநாள் விஜயதசமி. கொலு வைப்பவர் கள் அதையும் கொண்டாட வேண்டும். அதன் பின்தான் கொலுவை கலைக்க வேண்டும்.

    விஜயதசமி அன்று நாம் முக்கிய முடிவுகளை எடுக்க லாம். மேலும் புதிய தொழில் ஆரம்பிக்கலாம். குழந்தை களை பள்ளியில் சேர்க்கலாம். புதிய கலை பயில்வோர், இந்த நாளில் தொடங்கலாம்.

    வீட்டில் கொலு வைப்பதால் முப்பெருந்தேவியரின் அருள் கிடைக்கும். குறிப்பாக செல்வம், அறிவு, தைரி யம் போன்றவை வந்து சேரும். திருமணமான பெண்கள் இந்த பூஜையை நடத்தினால் மாங்கல்ய பாக்கியம் கிடைக்கும். குடும்பம் சிறப்படையும்.

    திருமணமாகாத பெண்கள் இந்த பூஜையை நடத்தினால் அவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடுவதோடு நல்ல வரனாகவும் கிடைக்கும்.
    Next Story
    ×