என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
தல்லாகுளம் பெருமாள் கோவில் புரட்டாசி திருவிழா 22-ந்தேதி தொடங்குகிறது
Byமாலை மலர்20 Sep 2017 6:49 AM GMT (Updated: 20 Sep 2017 6:50 AM GMT)
மதுரை தல்லாகுளத்தில் அமைந்துள்ள பெருமாள் கோவிலில் புரட்டாசி திருவிழா 22-ந் தேதி தொடங்குகிறது. இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம்.
மதுரை தல்லாகுளத்தில் அமைந்துள்ள பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் புரட்டாசி திருவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான திருவிழா வருகிற 22-ந் தேதி தொடங்குகிறது. அடுத்த மாதம்(அக்டோபர்) 4- ந் தேதி வரை விழா நடக்கிறது.
22-ந் தேதி அங்குரார்பணத்துடன் விழா தொடங்குகிறது. 23-ந் தேதி காலை கொடியேற்றப்படுகிறது.
தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன. அன்னம், சிம்மம், அனுமார், கருடன், யானை, குதிரை மற்றும் சேஷ வாகனத்தில் சாமி எழுந்தருளுகின்றார்.
முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 1-ந் தேதி காலை 8.45 மணிக்கு மேல் 9.15 மணிக்குள் நடக்கிறது. அன்று இரவு பூப்பல்லக்கில் பெருமாள் எழுந்தருளுகிறார்.
மறுநாள்(2-ந் தேதி) காலை திருமுக்குளத்தில் தீர்த்தவாரியும் இரவில் பூச்சப்பரத்தில் எழுந்தருளலும் நடக்கும். மேலும் 3-ந் தேதி தெப்ப உற்சவம் நடக்கிறது. 4-ந் தேதி உற்சவ சாந்தியுடன் திருவிழா முடிவடைகிறது.
திருவிழா ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், செயல் அலுவலர் மாரிமுத்து ஆகியோர் செய்து வருகிறார்கள்.
22-ந் தேதி அங்குரார்பணத்துடன் விழா தொடங்குகிறது. 23-ந் தேதி காலை கொடியேற்றப்படுகிறது.
தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன. அன்னம், சிம்மம், அனுமார், கருடன், யானை, குதிரை மற்றும் சேஷ வாகனத்தில் சாமி எழுந்தருளுகின்றார்.
முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 1-ந் தேதி காலை 8.45 மணிக்கு மேல் 9.15 மணிக்குள் நடக்கிறது. அன்று இரவு பூப்பல்லக்கில் பெருமாள் எழுந்தருளுகிறார்.
மறுநாள்(2-ந் தேதி) காலை திருமுக்குளத்தில் தீர்த்தவாரியும் இரவில் பூச்சப்பரத்தில் எழுந்தருளலும் நடக்கும். மேலும் 3-ந் தேதி தெப்ப உற்சவம் நடக்கிறது. 4-ந் தேதி உற்சவ சாந்தியுடன் திருவிழா முடிவடைகிறது.
திருவிழா ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், செயல் அலுவலர் மாரிமுத்து ஆகியோர் செய்து வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X