search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    உறியடி உற்சவத்தையொட்டி உற்சவர் நம்பெருமாள் ஸ்ரீபண்டாரம் ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருளிய காட்சி.
    X
    உறியடி உற்சவத்தையொட்டி உற்சவர் நம்பெருமாள் ஸ்ரீபண்டாரம் ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருளிய காட்சி.

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் உறியடி உற்சவம் இன்று நடக்கிறது

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் மாதந்தோறும் நடைபெறும் விழாக்களில் முக்கிய விழாவான நம்பெருமாள் உறியடி உற்சவ புறப்பாடு இன்று (வியாழக்கிழமை) நடைபெறுகிறது.
    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் மாதந்தோறும் நடைபெறும் விழாக்களில் ஆவணி மாதம் நடைபெறும் கிருஷ்ணர் ஜெயந்தி புறப்பாடு மற்றும் உறியடி உற்சவம் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். அதன்படி கிருஷ்ண ஜெயந்தி புறப்பாடு நேற்று காலை நடைபெற்றது. காலை 6 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு காலை 6.30 மணிக்கு ஸ்ரீபண்டாரம் ஆஸ்தான மண்டபத்திற்கு வந்து சேந்தார்.

    காலை 11 மணிமுதல் மதியம் 2 மணிவரை திருமஞ்சனம் நடைபெற்றது. மதியம் 2.30 மணி முதல் மாலை 5 மணிவரை பொதுஜனசேவை நடைபெற்றது. பின்னர் மாலை 5.45 மணிக்கு நம்பெருமாள் ஸ்ரீபண்டாரம் ஆஸ்தான மண்டபத்திலிருந்து புறப்பட்டு மாலை 6 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார்.

    இன்று (வியாழக்கிழமை) நம்பெருமாள் உறியடி உற்சவ புறப்பாடு நடைபெறுகிறது. காலை 7.15 மணிக்கு கிருஷ்ணன் புறப்பாடு நடைபெறுகிறது. காலை 9 மணிக்கு கிருஷ்ணன் சித்திரை வீதிகளில் எண்ணெய் விளையாட்டு கண்டருளுகிறார். மாலை 3 மணிக்கு நம்பெருமாள் உபயநாச்சியார்கள் மற்றும் கிருஷ்ணனுடன் புறப்பட்டு அம்மாமண்டபம் சாலையில் உள்ள யாதவ ஆஸ்தான மண்டபத்திற்கு மாலை 4 மணிக்கு வந்து சேருகிறார்.

    மாலை 6.30 மணிக்கு நம்பெருமாள் ஆஸ்தான மண்டபத்தில் இருந்து புறப்பட்டு இரவு 8.15 மணியளவில் சித்திரை வீதிகளில் வலம் வந்து பாதாள கிருஷ்ணர் சன்னதி அருகில் நடைபெறும் உறியடி உற்சவத்தை கண்டருளுகிறார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு இரவு 9 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார்.
    Next Story
    ×