என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
தல்லாகுளம் பெருமாள் கோவில் புரட்டாசி பெருந்திருவிழா 23-ந்தேதி தொடங்குகிறது
Byமாலை மலர்12 Sep 2017 4:43 AM GMT (Updated: 12 Sep 2017 4:43 AM GMT)
மதுரை தல்லாகுளம் பெருமாள் கோவிலில் புரட்டாசி பெருந்திருவிழா வருகிற 23-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
பிரசித்தி பெற்ற அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலின் உபகோவிலான மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் மிக முக்கியமானது புரட்டாசி பெருந்திருவிழாவாகும். இந்த விழாவானது வருகிற 23-ந் தேதி புரட்டாசி முதல் சனிக்கிழமை அன்று காலை 6.30 மணிக்கு மேல் 7.15 மணிக்குள் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்று இரவு பெருமாள் அன்னவாகனத்தில் எழுந்தருளும் புறப்பாடு நடைபெறும்.
தொடர்ந்து மறுநாள் (24-ந்தேதி) காலையில் கிருஷ்ணா அவதாரமும், இரவு சிம்ம வாகனத்தில் புறப்பாடும், 25-ந்தேதி காலை ராமாவதாரமும், இரவு அனுமார் வாகன புறப்பாடும், 26-ந்தேதி காலை கஜேந்திர மோட்சமும், இரவு பெருமாள் கருட வாகனத்தில் புறப்பாடும் நடைபெறுகிறது. தொடர்ந்து 27-ந்தேதி காலை ராஜாங்க சேவையும், இரவு சேஷ வாகனத்தில் பெருமாள் புறப்பாடு நடைபெறும். 28-ந் தேதி காலை காளிங்க நர்த்தனமும், இரவு மோகனா அவதாரத்திலும் தொடர்ந்து யானை வாகனத்திலும் பெருமாள் எழுந்தருளுகிறார்.
9-ந்தேதி காலை சேஷ சயனமும், இரவு புஷ்ப விமானத்திலும் சுவாமி காட்சி தருகிறார். 30-ந்தேதி காலையில் வெண்ணெய் தாழியும், அன்று இரவு குதிரை வாகனத்திலும், அக்டோபர் 1-ந்தேதி காலையில் திருத்தேரோட்டமும், அன்று இரவு பூப்பல்லக்கிலும் பெருமாள் எழுந்தருளும் நிகழ்ச்சிகளும் நடக்கின்றன. 2-ந்தேதி காலை திருமுக்குளத்தில் தீர்த்தவாரியும், அன்று இரவு பூப்பல்லக்கும் நடைபெறுகிறது.
இதைத்தொடர்ந்து திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான 3-ந்தேதி காலை 10.30 மணிக்கு மேல் 12 மணிக்குள் தெப்ப உற்சவம் நடைபெற்று, மறுநாள் 4-ந்தேதி உற்சவ சாந்தியுடன் புரட்டாசி பெருந்திருவிழா நிறைவுபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், நிர்வாக அதிகாரி மாரிமுத்து, மற்றும் திருக்கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
தொடர்ந்து மறுநாள் (24-ந்தேதி) காலையில் கிருஷ்ணா அவதாரமும், இரவு சிம்ம வாகனத்தில் புறப்பாடும், 25-ந்தேதி காலை ராமாவதாரமும், இரவு அனுமார் வாகன புறப்பாடும், 26-ந்தேதி காலை கஜேந்திர மோட்சமும், இரவு பெருமாள் கருட வாகனத்தில் புறப்பாடும் நடைபெறுகிறது. தொடர்ந்து 27-ந்தேதி காலை ராஜாங்க சேவையும், இரவு சேஷ வாகனத்தில் பெருமாள் புறப்பாடு நடைபெறும். 28-ந் தேதி காலை காளிங்க நர்த்தனமும், இரவு மோகனா அவதாரத்திலும் தொடர்ந்து யானை வாகனத்திலும் பெருமாள் எழுந்தருளுகிறார்.
9-ந்தேதி காலை சேஷ சயனமும், இரவு புஷ்ப விமானத்திலும் சுவாமி காட்சி தருகிறார். 30-ந்தேதி காலையில் வெண்ணெய் தாழியும், அன்று இரவு குதிரை வாகனத்திலும், அக்டோபர் 1-ந்தேதி காலையில் திருத்தேரோட்டமும், அன்று இரவு பூப்பல்லக்கிலும் பெருமாள் எழுந்தருளும் நிகழ்ச்சிகளும் நடக்கின்றன. 2-ந்தேதி காலை திருமுக்குளத்தில் தீர்த்தவாரியும், அன்று இரவு பூப்பல்லக்கும் நடைபெறுகிறது.
இதைத்தொடர்ந்து திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான 3-ந்தேதி காலை 10.30 மணிக்கு மேல் 12 மணிக்குள் தெப்ப உற்சவம் நடைபெற்று, மறுநாள் 4-ந்தேதி உற்சவ சாந்தியுடன் புரட்டாசி பெருந்திருவிழா நிறைவுபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், நிர்வாக அதிகாரி மாரிமுத்து, மற்றும் திருக்கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X