என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
முள்ளக்காடு ஸ்ரீவடபத்திரகாளி அம்மன் கோவில் கொடை விழா
Byமாலை மலர்5 Sep 2017 10:18 AM GMT (Updated: 5 Sep 2017 10:18 AM GMT)
தூத்துக்குடி முள்ளக்காடு இந்து நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீவடபத்திரகாளியம்மன் கோவில் கொடை விழா இன்று (5-ந்தேதி) நடைபெற்றது.
தூத்துக்குடி முள்ளக்காடு இந்து நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீவடபத்திரகாளியம்மன் கோவில் கொடை விழா இன்று (5-ந்தேதி) நடைபெற்றது. காலை 7 மணிக்கு நையாண்டி மேளத்துடன் தீர்த்தக்கரை சென்று புனிதநீர் கொண்டு வரப்படுகிறது. 12 மணிக்கு நையாண்டி மேளம், வாடிப்பட்டி தம்பாமேளம், மார்த்தாண்டம் செண்டாமேளத்துடன் அம்பாளுக்கு ஓமகுண்ட பூஜையுடன் சிறப்பு அபிஷேகமும், தீபாராதனையும் நடைபெற்றது.
காலையிலும், மதியமும் அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து இரவு 7 மணிக்கு பாளையங்கோட்டை குழுவினரின் வில்லிசை, 8 மணிக்கு கரகாட்டம் நடைபெறுகிறது. தொடர்ந்து நேமிஷம், முளைப்பாரி எடுத்து வரப்படுகிறது. 10 மணிக்கு அம்பாளுக்கு விசேஷ தீபாராதனை நடைபெறுகிறது. இரவு 12 மணிக்கு வாணவேடிக்கையுடன் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்துடன் அம்பாள் நகர்வலம் வருதல் நடைபெறுகிறது.
நாளை (6-ந்தேதி) காலை 9 மணிக்கு பொங்கலிடுதல், 1 மணிக்கு மஞ்சள் நீராடுதலுடன் , விசேஷ பூஜை நடைபெற்று முளைபாரி கரைத்தலுடன் கொடை விழா நிகழ்ச்சிகள் நிறைவு பெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் தர்ம கர்த்தா சேகர் என்ற சந்திரசேகர் மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.
காலையிலும், மதியமும் அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து இரவு 7 மணிக்கு பாளையங்கோட்டை குழுவினரின் வில்லிசை, 8 மணிக்கு கரகாட்டம் நடைபெறுகிறது. தொடர்ந்து நேமிஷம், முளைப்பாரி எடுத்து வரப்படுகிறது. 10 மணிக்கு அம்பாளுக்கு விசேஷ தீபாராதனை நடைபெறுகிறது. இரவு 12 மணிக்கு வாணவேடிக்கையுடன் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்துடன் அம்பாள் நகர்வலம் வருதல் நடைபெறுகிறது.
நாளை (6-ந்தேதி) காலை 9 மணிக்கு பொங்கலிடுதல், 1 மணிக்கு மஞ்சள் நீராடுதலுடன் , விசேஷ பூஜை நடைபெற்று முளைபாரி கரைத்தலுடன் கொடை விழா நிகழ்ச்சிகள் நிறைவு பெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் தர்ம கர்த்தா சேகர் என்ற சந்திரசேகர் மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X