என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
சுசீந்திரம் கோவிலில் குருபெயர்ச்சி சிறப்பு வழிபாடு 2-ந்தேதி நடக்கிறது
Byமாலை மலர்30 Aug 2017 5:47 AM GMT (Updated: 30 Aug 2017 5:47 AM GMT)
சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் குருபெயர்ச்சி சிறப்பு லட்சார்ச்சனை மற்றும் வழிபாடு வருகிற 2-ந் தேதி (சனிக்கிழமை) நடக்கிறது.
குருபகவான் ஒவ்வொரு ஆண்டும் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயர்வது வழக்கம். அதுபோல் இந்த ஆண்டுக்கான குருபெயர்ச்சி விழா வருகிற 2-ந் தேதி (சனிக்கிழமை) நடக்கிறது. அன்று காலை 6.39 மணிக்கு குரு பகவான் கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு இடம் பெயர்கிறார்.
இதையொட்டி குமரி மாவட்ட திருக்கோவில்கள் நிர்வாகம் சார்பில் சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் லட்சார்ச்சனை மற்றும் சிறப்பு வழிபாடு நடக்கிறது.
முன்னதாக 1-ந் தேதி மாலை 5 மணிக்கு முதல் கால யாக பூஜை நடைபெறுகிறது. 2-ந் தேதி அதிகாலை 3.30 மணிக்கு 2-ம் கால யாகபூஜையும், 5.30 மணிக்கு குரு முதல்கடவுளாக திகழும் தட்சிணாமூர்த்திக்கு 27 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகமும் நடைபெறுகிறது. தொடர்ந்து காலை 6.39 மணிக்கு மகாதீபாராதனை நடக்கிறது.
பின்னர் பக்தர்கள் தங்களது பரிகாரங்களை நிவர்த்தி செய்யும் வகையில் தட்சிணாமூர்த்திக்கு கொண்டைக் கடலையால் ஆன மாலை, வெள்ளை அரளி மாலை, மஞ்சள்நிற துண்டு, முல்லைப்பூ மாலை அணிவித்து தீப வழிபாடு மற்றும் தங்களது ராசி பெயரில் சிறப்பு அர்ச்சனையும் செய்யலாம்.
இதைப்போல் சுசீந்திரம் தாலகுளம் பிள்ளையார் கோவில், தளியல் மகாதேவர் கோவில், நாகர்கோவில் வடசேரி சோழராஜா கோவில், பூதப்பாண்டி பூதலிங்கசாமி கோவில், தெரிசனங்கோப்பு ராகவேஸ்வரர் கோவில், கன்னியாகுமரி குகநாதீஸ்வரர் கோவில், தாழக்குடி அழகேஸ்வரி ஜெயந்தீஸ்வரர் கோவில், பத்மநாபபுரம் நீலகண்டசுவாமி கோவில், ஆரல்வாய்மொழி மீனாட்சி சுந்தரேஸ்வரர்கோவில், வடிவீஸ்வரம் அழகம்மன்கோவில் மற்றும் குமரிமாவட்டத்தில் குருபகவான் சன்னதி உள்ள அனைத்து கோவில்களிலும் குருபெயர்ச்சி விழாவையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகிறது.
இதையொட்டி குமரி மாவட்ட திருக்கோவில்கள் நிர்வாகம் சார்பில் சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் லட்சார்ச்சனை மற்றும் சிறப்பு வழிபாடு நடக்கிறது.
முன்னதாக 1-ந் தேதி மாலை 5 மணிக்கு முதல் கால யாக பூஜை நடைபெறுகிறது. 2-ந் தேதி அதிகாலை 3.30 மணிக்கு 2-ம் கால யாகபூஜையும், 5.30 மணிக்கு குரு முதல்கடவுளாக திகழும் தட்சிணாமூர்த்திக்கு 27 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகமும் நடைபெறுகிறது. தொடர்ந்து காலை 6.39 மணிக்கு மகாதீபாராதனை நடக்கிறது.
பின்னர் பக்தர்கள் தங்களது பரிகாரங்களை நிவர்த்தி செய்யும் வகையில் தட்சிணாமூர்த்திக்கு கொண்டைக் கடலையால் ஆன மாலை, வெள்ளை அரளி மாலை, மஞ்சள்நிற துண்டு, முல்லைப்பூ மாலை அணிவித்து தீப வழிபாடு மற்றும் தங்களது ராசி பெயரில் சிறப்பு அர்ச்சனையும் செய்யலாம்.
இதைப்போல் சுசீந்திரம் தாலகுளம் பிள்ளையார் கோவில், தளியல் மகாதேவர் கோவில், நாகர்கோவில் வடசேரி சோழராஜா கோவில், பூதப்பாண்டி பூதலிங்கசாமி கோவில், தெரிசனங்கோப்பு ராகவேஸ்வரர் கோவில், கன்னியாகுமரி குகநாதீஸ்வரர் கோவில், தாழக்குடி அழகேஸ்வரி ஜெயந்தீஸ்வரர் கோவில், பத்மநாபபுரம் நீலகண்டசுவாமி கோவில், ஆரல்வாய்மொழி மீனாட்சி சுந்தரேஸ்வரர்கோவில், வடிவீஸ்வரம் அழகம்மன்கோவில் மற்றும் குமரிமாவட்டத்தில் குருபகவான் சன்னதி உள்ள அனைத்து கோவில்களிலும் குருபெயர்ச்சி விழாவையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X