search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பிடித்து வைத்தால் பிள்ளையார்
    X

    பிடித்து வைத்தால் பிள்ளையார்

    புற்றுமண், அரைத்தமாவு, மஞ்சள் ஆகியவற்றை ஒரு கைப்பிடி பிடித்தாலே அது பிள்ளையாராகி விடும். இதனைத் தான் ‘பிடித்து வைத்தால் பிள்ளையார்’ என்று சொல்கிறார்கள்.
    பிள்ளையார் வழிபாடு மிகவும் எளிமையானது. கல், மண், மரம், செம்பு முதலியவற்றால் இறைவனின் திருவுருவங்களைச் செய்ய வேண்டும் என்று ஆகமங்கள் கூறுகின்றன.

    ஆனால் மண், பசுஞ்சாணம், மஞ்சள், மரக்கல், கருங்கல், பளிங்குக்கல், தங்கம், வெள்ளி போன்ற உலோகங்கள், முத்து, பவளம் போன்ற ரத்தினங்கள், தந்தம், வெள்ளெருக்கு வேர், அத்திமரம், பசு வெண்ணைய், அரைத்த சந்தனம், வெண்ணீறு, சர்க்கரை, வெல்லம் ஆகியவற்றால் விநாயகர் வடிவத்தை அமைக்கலாம்.

    புற்றுமண், அரைத்தமாவு, சாளக்கிராமம் (நர்மதை நதிக்கல்) ஆகியவற்றை ஒரு கைப்பிடி பிடித்தாலே அது பிள்ளையாராகி விடும். இதனைத் தான் ‘பிடித்து வைத்தால் பிள்ளையார்’ என்று வேடிக்கைப் பழமொழியாக சொல்கிறார்கள்.
    Next Story
    ×