search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சபரிமலை ஐயப்பன் கோவில் நடையை மேல்சாந்தி உண்ணிகிருஷ்ணன் நம்பூதிரி திறந்து வைத்த போது எடுத்த படம்.
    X
    சபரிமலை ஐயப்பன் கோவில் நடையை மேல்சாந்தி உண்ணிகிருஷ்ணன் நம்பூதிரி திறந்து வைத்த போது எடுத்த படம்.

    ஆவணி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு

    ஆவணி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நேற்று மாலை திறக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
    பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் மண்டல பூஜை, மகரவிளக்கு பூஜை சிறப்பு பெற்றவை. இதுதவிர ஒவ்வொரு தமிழ் மாதத்தின் முதல் 5 நாட்களிலும், விஷு, ஓணம் பண்டிகை நாட்களிலும், பங்குனி உத்திர திருவிழாவின் போதும் சபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டு, பல்வேறு பூஜைகள்- வழிபாடுகள் நடைபெறும்.

    ஆவணி மாத பூஜைக்காக சபரிமலை கோவில் நடை நேற்று மாலை 5.30 மணிக்கு திறக்கப்பட்டது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில், மேல்சாந்தி உண்ணிகிருஷ்ணன் நம்பூதிரி நடையை திறந்து வைத்து, குத்துவிளக்கு ஏற்றி தீபாராதனை நடத்தினார்.



    இன்று (வியாழக்கிழமை) முதல் அதிகாலை 5 மணிக்கு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய் அபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, தீபாராதனை, புஷ்பாபிஷேகம், அத்தாழ பூஜை உள்ளிட்டவை நடைபெறும். இதே போல் லட்சார்ச்சனையும் இன்று தொடங்கி 5 நாட்கள் நடக்கிறது.

    21-ந் தேதி (திங்கட்கிழமை) வரை தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு தலைமையில் படிபூஜை, உதயாஸ்தமன பூஜை, கலச பூஜை, களபாபிஷேகம் போன்றவையும் நடைபெறுகின்றன. 21-ந் தேதி அத்தாழ பூஜைக்கு பிறகு அரிவராசனம் பாடல் இசைக்கப்பட்டு, இரவு 10 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படும்.

    ஓணம் பண்டிகையையொட்டி அடுத்த மாதம் (செப்டம்பர்) 2- ந் தேதி மாலை கோவில் நடை திறக்கப்பட்டு, 6- ந் தேதி வரை சிறப்பு பூஜைகள் நடைபெறும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
    Next Story
    ×