search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் வளாகத்தில் நேற்று 2-வது நாளாக பெண்கள் பொங்கல் வைத்தபோது எடுத்தபடம்.
    X
    சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் வளாகத்தில் நேற்று 2-வது நாளாக பெண்கள் பொங்கல் வைத்தபோது எடுத்தபடம்.

    கோட்டை மாரியம்மன் கோவிலில் 2-வது நாளாக பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு

    சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் 2-வது நாளாக விடிய, விடிய திரளான பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர்.
    சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் ஆடித்திருவிழா கடந்த மாதம் 25-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதையொட்டி தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து பூஜை நடத்தப்படுகிறது. கோவிலில் திருப்பணிகள் நடந்து வருவதால் கம்பம் நடுதல், உருளுதண்டம் போன்ற முக்கிய நிகழ்ச்சிகள் நடத்தப்படவில்லை. தினமும் ஏராளமான பக்தர்கள் நீண்டவரிசையில் காத்திருந்து அம்மனை தரிசனம் செய்து வழிபடுகின்றனர்.

    இந்தநிலையில், விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக பக்தர்கள் கோவிலில் பொங்கல் வைத்து நேர்த்திக்கடன் செலுத்துவது நேற்று முன்தினம் இரவே தொடங்கியது. அன்றைய தினம் இரவு விடிய, விடிய கோவிலில் பெண்கள் பொங்கல் வைத்து அம்மனுக்கு படைத்து வழிபட்டனர்.

    நேற்று 2-வது நாளாக கோவில் பின்புறம் உள்ள காலி இடத்தில் ஆயிரக்கணக்கான பெண்கள் பொங்கல் வைத்து அம்மனுக்கு படைத்து வழிபட்டனர். அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து பூஜைகள் நடத்தப்பட்டன. உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளதால் நேற்று காலை முதல் இரவு வரையிலும் கோவிலில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருந்தது.

    இதேபோல் சேலம் அன்னதானப்பட்டி மாரியம்மன் கோவில், கடைவீதி சின்ன மாரியம்மன் கோவில், பொன்னம்மாபேட்டை புது மாரியம்மன் கோவில், சஞ்சீவராயன் பேட்டை மாரியம்மன், காளியம்மன் கோவில் உள்பட அனைத்து அம்மன் கோவில்களிலும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டன.
    Next Story
    ×