search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பெண்களுக்கு 2 நாட்கள் மட்டும் அனுமதி தரும் திருத்தலம்
    X

    பெண்களுக்கு 2 நாட்கள் மட்டும் அனுமதி தரும் திருத்தலம்

    எர்ணாகுளத்தில் உள்ள திருவல்லவாழ் திருத்தலத்தில் மார்கழி திருவாதிரை, சித்திரை விஷூ ஆகிய 2 நாட்கள் மட்டும் பெண்கள் பெருமாளை தரிசிக்க அனுமதிக்கப்படுகிறார்கள்.
    ஆண்டுக்கு 2 நாட்கள் மட்டும் சாமி தரிசனத்துக்கு பெண்கள் அனுமதிக்கப்படும் திருத்தலம் கேரளாவில் உள்ளது. எர்ணாகுளம் மாவட்டம் திருவல்லாவில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள திருத்தலம் திருவல்லவாழ். இங்கு 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது தான் இந்த திருக்கோவில். மூலவர் திருநாமம் திருவாழ்மார்பன். இங்கு தாயார் செல்வ திருக்கொழுந்து நாச்சியார் என்று அழைக்கப்படுகிறார்.

    பெருமாள் பிரம்மச்சரிய விரதம் கடைப்பிடிப்பதால் பெண்களுக்கு இங்கு அனுமதி இல்லை. மார்கழி திருவாதிரை, சித்திரை விஷூஆகிய 2 நாட்கள் மட்டும் பெண்கள் பெருமாளை தரிசிக்க அனுமதிக்கப்படுகிறார்கள். இந்த திருத்தலம் 108 திவ்ய தேசங்களில் ஒன்று.
    Next Story
    ×