search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஆனி திருமஞ்சனத்தையொட்டி நடராஜர், சிவகாமி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த காட்சி.
    X
    ஆனி திருமஞ்சனத்தையொட்டி நடராஜர், சிவகாமி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த காட்சி.

    பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் ஆனி திருமஞ்சனம், வருடாபிஷேகம்

    பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் ஆனி திருமஞ்சனம் மற்றும் வருடாபிஷேக விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    பழனி முருகன் கோவிலின் உபகோவிலான பெரியநாயகி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் ஆனி மாதம் சப்தமி உத்திர நட்சத்திர நாள் அன்று ஆனிதிருமஞ்சன விழா நடைபெறும். அதன்படி நேற்று ஆனி திருமஞ்சன விழா நடந்தது. இதையாட்டி அதிகாலை 4 மணிக்கு பெரியநாயகி அம்மன் கோவிலில் நடராஜர் சன்னதியில் உள்ள நடராஜர், சிவகாமி அம்மன் மாணிக்கவாசகர், திருஞானசம்பந்தர் திருநாவுக்கரசர், சுந்தரர், விநாயகர், சண்டிகேஸ்வரர் ஆகியோருக்கு 16 வகையான அபிஷேகம் நடைபெற்றது.

    பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தேவாரம் திருப்புகழ் பாடி சிறப்பு பூஜைகளும், 16 வகை தீபாராதனையும் நடைபெற்றது. காலை 6 மணிக்கு நடராஜர்- சிவகாமி அம்மன் சப்பரத்தில் எழுந்தருளி 4 ரத வீதிகளில் உலா நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    பெரியநாயகி அம்மன் கோவிலில் நடைபெற்ற கும்பாபிஷேகத்தையொட்டி ஆண்டு தோறும் ஆனி மாதத்தில் உத்திர நட்சத்திர நாள் அன்று வருடாபிஷேகம் நடைபெறுகிறது. இதையொட்டி நேற்று காலை பெரியநாயகி அம்மன் கோவில் சோமஸ்கந்தர் சன்னதி முன்பு வருடாபிஷேகம் நடைபெற்றது.

    இதையொட்டி கலச பூஜையும் சிறப்பு யாகமும் நடைபெற்றது. பின்னர் உச்சிகால பூஜையில் சோமஸ்கந்தர், வள்ளி, தெய்வானை, சிவன், பெரியநாயகி அம்மனுக்கு 16 வகை அபிஷேகமும், கலசபூஜையும், சிறப்பு அலங்காரமும் நடைபெற்று தீபாராதனை நடைபெற்றது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    Next Story
    ×