என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் ஆனி மாத அமாவாசை சிறப்பு பூஜை
Byமாலை மலர்24 Jun 2017 10:27 AM GMT (Updated: 24 Jun 2017 10:27 AM GMT)
கோவை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற வேண்டுதல் தலமான ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் ஆனி மாத அமாவாசை சிறப்பு பூஜை நடைபெற்றது.
கோவை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற வேண்டுதல் தலமாக ஆனைமலை மாசாணியம்மன் கோவில் திகழ்ந்து வருகிறது.
ஆனைமலை உப்பாற்றங் கரையில் சயன நிலையிலிருந்து அருள் பாலித்து வருகிறார் மாசாணியம்மன். மயானக் கரையில் அமைந் துள்ள மாசாணியம்மன் கோவிலில் அமாவாசை தோறும் சிறப்பு பூஜைகள் நடை பெற்று வருகின்றன. ஆனி மாத அமாவாசை பூஜையை முன்னிட்டு நேற்று முன்தினம் மாலை முதல் பக்தர்கள் கோவில் வளாகத்தில் குவியத்தொடங்கினர்.
இதனையடுத்து கோவில் நடை சாத்தாமல் விடிய, விடிய திறந்து வைத்திருக்க கோவில் நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது. அதிகாலையில் அம்மனுக்கு சிறப்பு அலங்கார அபிஷேகம் செய்யப்பட்டது. இதனையடுத்து நடைபெற்ற முதல் கால பூஜையில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அம்மனை தரிசனம் செய்தனர்.
இதனையடுத்து நடைபெற்ற உச்சிபூஜை . சாய ரட்சை பூஜை, மற்றும் தங்க மலர் அர்ச்சனையிலும் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருந்து அம்மனை தரிசனம் செய்தனர். கோவில் வளாகத்தில் நடைபெற்ற அன்னதான நிகழ்ச்சியிலும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
மதுரை. தேனி, திண்டுக் கல், பழனி, திருப்பூர், கோவை உள்ளிட்ட முக்கிய நகரங்களிலிருந்து வரும் பக்தர்களின் வசதிக்காக 50-க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் தமிழ் நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் விடியவிடிய இயக்கப்பட்டன.
நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை உதவி ஆணையர் கார்த்திக், கண்காணிப்பாளர் தமிழ்வாணன், புலவர் லோக நாதீஸ்வரன் மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர்.
ஆனைமலை உப்பாற்றங் கரையில் சயன நிலையிலிருந்து அருள் பாலித்து வருகிறார் மாசாணியம்மன். மயானக் கரையில் அமைந் துள்ள மாசாணியம்மன் கோவிலில் அமாவாசை தோறும் சிறப்பு பூஜைகள் நடை பெற்று வருகின்றன. ஆனி மாத அமாவாசை பூஜையை முன்னிட்டு நேற்று முன்தினம் மாலை முதல் பக்தர்கள் கோவில் வளாகத்தில் குவியத்தொடங்கினர்.
இதனையடுத்து கோவில் நடை சாத்தாமல் விடிய, விடிய திறந்து வைத்திருக்க கோவில் நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது. அதிகாலையில் அம்மனுக்கு சிறப்பு அலங்கார அபிஷேகம் செய்யப்பட்டது. இதனையடுத்து நடைபெற்ற முதல் கால பூஜையில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அம்மனை தரிசனம் செய்தனர்.
இதனையடுத்து நடைபெற்ற உச்சிபூஜை . சாய ரட்சை பூஜை, மற்றும் தங்க மலர் அர்ச்சனையிலும் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருந்து அம்மனை தரிசனம் செய்தனர். கோவில் வளாகத்தில் நடைபெற்ற அன்னதான நிகழ்ச்சியிலும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
மதுரை. தேனி, திண்டுக் கல், பழனி, திருப்பூர், கோவை உள்ளிட்ட முக்கிய நகரங்களிலிருந்து வரும் பக்தர்களின் வசதிக்காக 50-க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் தமிழ் நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் விடியவிடிய இயக்கப்பட்டன.
நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை உதவி ஆணையர் கார்த்திக், கண்காணிப்பாளர் தமிழ்வாணன், புலவர் லோக நாதீஸ்வரன் மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X