search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ராகவேந்திரர் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றதையும், அதில் கலந்து கொண்ட பக்தர்களையும் படத்தில் காணலாம்.
    X
    ராகவேந்திரர் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றதையும், அதில் கலந்து கொண்ட பக்தர்களையும் படத்தில் காணலாம்.

    கடலூர் ராகவேந்திரர் கோவில் கும்பாபிஷேகம்

    கடலூர் கூத்தப்பாக்கம் ராகவேந்திரர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமிதரிசனம் செய்தனர்.
    கடலூர் கூத்தப்பாக்கத்தில் ராகவேந்திரர் கோவில் உள்ளது. இந்த கோவில் கும்பாபிஷே விழா கடந்த 16-ந் தேதி கணபதி பூஜையுடன் தொடங்கியது. மறுநாள் காலை 7 மணிக்கு கோபூஜை, ஆச்சார்ய பூஜை, கலச பிரதிஷ்டை பூஜை, கணபதி ஹோமம், வேதபாராயணம், வாஸ்து ஹோமம் உள்ளிட்ட சிறப்பு ஹோம பூஜைகள் நடைபெற்றது.

    பின்னர் 18-ந் தேதி தேவதா பூஜை, அர்ச்சனை பிரதிஷ்ட ஹோமம், வேதபாராயணம் உள்ளிட்ட பூஜைகளும், 19-ந் தேதி நரசிம்ம மந்திர ஹோமம் உள்ளிட்ட பூஜைகளும், நேற்று முன்தினம் சிறப்பு ஹோமங்களும் நடைபெற்றது.

    விழாவில் நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக காலை சிறப்பு யாகசாலை பூஜைகள் நடந்தது. பின்னர் ஸ்ரீரங்கம் ரங்கநாத்சார், தாராபுரம் சீனுவாச்சார் ஆகியோர் தலைமையில் யாகசாலையில் இருந்து புனித நீர் அடங்கிய கலசங்கள் புறப்பாடு நடைபெற்று கோவில் கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மாஞ்சாலம்மன் கோவில் கும்பாபிஷேகமும், அதைத் தொடர்ந்து அபிஷேக அலங்காரமும் நடைபெற்றது.

    இதில் உள்ளூர் மட்டுமின்றி பெங்களூரு, ஐதராபாத், புதுச்சேரி போன்ற வெளிமாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீமத்வ சித்தாந்த சேவா சங்கம் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் செய்தனர்.
    Next Story
    ×