என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
மீனாட்சி அம்மன் கோவிலில் ஆனி உற்சவம்: சொக்கநாத பெருமானுக்கு 8-ந்தேதி முப்பழ பூஜை
Byமாலை மலர்22 Jun 2017 2:59 AM GMT (Updated: 22 Jun 2017 2:59 AM GMT)
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆனி உற்சவ விழா வருகிற 29-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை 10 நாட்கள் நடைபெற உள்ளது. இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆனி உற்சவ விழா வருகிற 29-ந் தேதி முதல் 8-ந் தேதி வரை 10 நாட்கள் நடைபெற உள்ளது. இந்த நாட்களில் சாயரட்சை பூஜைக்கு பின் மீனாட்சி-சுந்தரேசுவரர் பஞ்சமூர்த்தியுடன் புறப்பாடாகி சுவாமி சன்னதி 100 கால் மண்டபத்தில் உள்ள ஊஞ்சல் மண்டபத்திற்கு எழுந்தருளுகிறார்.
பின்னர் மாணிக்கவாசகர் அருளிய திருவாசகத்தின் திருப்பொன்னூஞ்சல் பதிகம் (9 பாடல்கள்) தல ஓதுவாரால் பாடப்படுகிறது. அதனை நாதசுவர கலைஞர் கள் 9 வகையான ராகத்தில் இசைக்கிறார்கள். பின் தீபாராதனை முடிந்து 2-ம் பிரகாரம் சுற்றி சேர்த்தியாகிறார்கள்.
29-ந் தேதி அதிகாலை 3 மணியளவில் பஞ்ச சபை நடராஜர், சிவகாமி அம்மனுக்கு கால்மாறி ஆடுகிறார். பின்னர் கால பூஜைகள் முடிந்ததும் காலை 7 மணிக்கு நடராஜர்- சிவகாமி அம்மன் ஆகியோர் மாசி வீதிகளில் உலா வருகிறார்கள்.
30-ந் தேதி காலை பழைய திருக்கல்யாண மண்டபத்தில் பாலாபிஷேகம் நடைபெறும். இரவில் பஞ்ச மூர்த்திகளுடன் ரிஷப வாகனத்தில் மாசி வீதிகளில் சுவாமி-அம்மன் எழுந்தருளுகிறார்கள்.
ஆனி மாத பவுர்ணமியான 8-ந்தேதி பகல் 12 மணிக்கு மூலஸ்தான சொக்கநாத பெருமானுக்கு மா, பலா, வாழை ஆகிய முக்கனிகளால் பூஜை மற்றும் அபிஷேகம் நடைபெறுகிறது.
மக நட்சத்திரத்தில் தொடங்கும் விழா மூல நட்சத்திரமான ஜூலை 8-ந் தேதி நிறைவடைகிறது. உற்சவ நாட்களில் திருக்கல்யாணம், தங்கரத உலா ஆகியவை பதிவு செய்து நடத்திட இயலாது என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பின்னர் மாணிக்கவாசகர் அருளிய திருவாசகத்தின் திருப்பொன்னூஞ்சல் பதிகம் (9 பாடல்கள்) தல ஓதுவாரால் பாடப்படுகிறது. அதனை நாதசுவர கலைஞர் கள் 9 வகையான ராகத்தில் இசைக்கிறார்கள். பின் தீபாராதனை முடிந்து 2-ம் பிரகாரம் சுற்றி சேர்த்தியாகிறார்கள்.
29-ந் தேதி அதிகாலை 3 மணியளவில் பஞ்ச சபை நடராஜர், சிவகாமி அம்மனுக்கு கால்மாறி ஆடுகிறார். பின்னர் கால பூஜைகள் முடிந்ததும் காலை 7 மணிக்கு நடராஜர்- சிவகாமி அம்மன் ஆகியோர் மாசி வீதிகளில் உலா வருகிறார்கள்.
30-ந் தேதி காலை பழைய திருக்கல்யாண மண்டபத்தில் பாலாபிஷேகம் நடைபெறும். இரவில் பஞ்ச மூர்த்திகளுடன் ரிஷப வாகனத்தில் மாசி வீதிகளில் சுவாமி-அம்மன் எழுந்தருளுகிறார்கள்.
ஆனி மாத பவுர்ணமியான 8-ந்தேதி பகல் 12 மணிக்கு மூலஸ்தான சொக்கநாத பெருமானுக்கு மா, பலா, வாழை ஆகிய முக்கனிகளால் பூஜை மற்றும் அபிஷேகம் நடைபெறுகிறது.
மக நட்சத்திரத்தில் தொடங்கும் விழா மூல நட்சத்திரமான ஜூலை 8-ந் தேதி நிறைவடைகிறது. உற்சவ நாட்களில் திருக்கல்யாணம், தங்கரத உலா ஆகியவை பதிவு செய்து நடத்திட இயலாது என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X