search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    உங்கள் வீட்டில் மகாலட்சுமி வாசம் செய்ய வேண்டுமா?
    X

    உங்கள் வீட்டில் மகாலட்சுமி வாசம் செய்ய வேண்டுமா?

    எல்லா செல்வமும் ஒரு சேர இருக்கும் இடத்தில் இருப்பவள் ‘அஷ்ட லட்சுமி’. உங்கள் வீட்டில் மகாலட்சுமி வாசம் செய்ய என்ன செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.
    மகாலட்சுமி ஒவ்வொரு வீட்டிலும் கடாட்சம் செய்ய அதிகாலை எழுந்ததும் கொல்லைப்புற வாசலை திறந்து வைத்து, அதன் பின் தலைவாசலை திறக்க வேண்டும்.

    செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் ஐந்து முகம் கொண்ட குத்து விளக்கை ஏற்றி வழிபட வேண்டும். வீட்டிற்கு வரும் சுமங்கலிப் பெண்களுக்கு மஞ்சள், குங்குமம், தண்ணீர் கொடுக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் நாம் செய்த பாவம் விலகும்.



    ஒருவர் தனக்கு சீராக அளிக்கப்பட்ட வெள்ளிப்பாத்திரங்களை தன் காலத்தில் விற்கவோ, அன்பளிப்பாக கொடுக்கவோ கூடாது. வெற்றிலை, பாக்கு, திருநீறு, ஆடை, பொன் போன்றவற்றை இருகரங்களால் ஏற்க வேண்டும்.

    வளையல், சீப்பு, கண்ணாடி, கண் மை, மஞ்சள், குங்குமம் ஆகியவற்றை தேங்காயுடன் முறத்தில் வைத்து தானம் அளிப்பவருக்கு லட்சுமி விரும்பிய வரங்களை அளிப்பார். எல்லா செல்வமும் ஒரு சேர இருக்கும் இடத்தில் இருப்பவள் ‘அஷ்ட லட்சுமி’.
    Next Story
    ×