search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கோபுர கலசம் மீது புனித நீர் ஊற்றப்பட்டதையும், பக்தர்கள் தரிசனம் செய்ததையும் படத்தில் காணலாம்.
    X
    கோபுர கலசம் மீது புனித நீர் ஊற்றப்பட்டதையும், பக்தர்கள் தரிசனம் செய்ததையும் படத்தில் காணலாம்.

    லாடமுனி சன்னாசி, சந்தன கருப்பண்ணசாமி கோவில் கும்பாபிஷேகம்

    செம்பட்டில் உள்ள லாடமுனி சன்னாசி, சந்தன கருப்பண்ணசாமி கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    திருச்சி மாவட்டம் செம்பட்டில் உள்ள லாடமுனி சன்னாசி, சந்தன கருப்பண்ணசாமி கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 11-ந்தேதி காலை காவிரியில் இருந்து தீர்த்தம் கொண்டு வந்து சாமிகளுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. 12-ந்தேதி காலை விநாயகர்பூஜை, கணபதி ஹோமம் உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து தீபாராதனை நடந்தது. 13-ந்தேதி காலை விநாயகர் பூஜை நடந்தது. தொடர்ந்து மாலை வரை பல்வேறு பூஜைகள் நடந்தன.

    நேற்று காலை 4.30 மணிக்கு விநாயகர் பூஜை நடந்தது. தொடர்ந்து காலை 7 மணிக்கு லாடமுனி சன்னாசி, சந்தன கருப்பண்ணசாமிகளுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மூலஸ்தான கும்பாபிஷேகம், தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் கே.டி.குணசேகரன் தலைமையில், ஜி.சீனிவாசன், ஆர்.கே.சீனிவாசன் மற்றும் ஊர் முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் செய்து இருந்தனர்.
    Next Story
    ×