என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
ஸ்ரீரங்கம் தாயார் சன்னதியில் வெளிக்கோடை உற்சவம் தொடங்கியது
Byமாலை மலர்18 May 2017 6:15 AM GMT (Updated: 18 May 2017 6:15 AM GMT)
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் தாயார் சன்னதியில் வெளிக்கோடை உற்சவம் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகாசி மாதம் நடைபெறும் தாயார் கோடை உற்சவம் வெளிக்கோடை, உள்கோடை என தலா 5 நாட்கள் நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டிற்கான வெளிக்கோடை உற்சவம் நேற்று மாலை தொடங்கியது. இந்த உற்சவம் வருகிற 21-ந் தேதி வரை 5 நாட்கள் நடக்கிறது.
முதல் நாளான நேற்று மாலை உற்சவர் ரெங்கநாச்சியார் மூலஸ்தானத்திலிருந்து மாலை 6.30 மணிக்கு புறப்பட்டு கோடை நாலுக்கால் மண்டபத்திற்கு இரவு 7 மணிக்கு வந்து சேர்ந்தார். அங்கு புஷ்பம் சாத்துப்படி கண்டருளிய பின்னர் 8 மணிக்கு மண்டபத்திலிருந்து புறப்பட்டு இரவு 8.45 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
வெளிக்கோடை உற்சவத்தை முன்னிட்டு 21-ந் தேதி வரை மாலை 5 மணிக்கு மேல் 6.30 மணிவரை தாயார் சன்னதியில் மூலஸ்தான சேவை கிடையாது. ரெங்கநாச்சியார் உள்கோடை உற்சவம் 22-ந் தேதி முதல் 26-ந் தேதி வரை 5 நாட்கள் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் ஜெயராமன் மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.
முதல் நாளான நேற்று மாலை உற்சவர் ரெங்கநாச்சியார் மூலஸ்தானத்திலிருந்து மாலை 6.30 மணிக்கு புறப்பட்டு கோடை நாலுக்கால் மண்டபத்திற்கு இரவு 7 மணிக்கு வந்து சேர்ந்தார். அங்கு புஷ்பம் சாத்துப்படி கண்டருளிய பின்னர் 8 மணிக்கு மண்டபத்திலிருந்து புறப்பட்டு இரவு 8.45 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
வெளிக்கோடை உற்சவத்தை முன்னிட்டு 21-ந் தேதி வரை மாலை 5 மணிக்கு மேல் 6.30 மணிவரை தாயார் சன்னதியில் மூலஸ்தான சேவை கிடையாது. ரெங்கநாச்சியார் உள்கோடை உற்சவம் 22-ந் தேதி முதல் 26-ந் தேதி வரை 5 நாட்கள் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் ஜெயராமன் மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X