search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஸ்ரீரங்கம் தாயார் சன்னதியில் வெளிக்கோடை உற்சவம் தொடங்கியது
    X

    ஸ்ரீரங்கம் தாயார் சன்னதியில் வெளிக்கோடை உற்சவம் தொடங்கியது

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் தாயார் சன்னதியில் வெளிக்கோடை உற்சவம் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகாசி மாதம் நடைபெறும் தாயார் கோடை உற்சவம் வெளிக்கோடை, உள்கோடை என தலா 5 நாட்கள் நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டிற்கான வெளிக்கோடை உற்சவம் நேற்று மாலை தொடங்கியது. இந்த உற்சவம் வருகிற 21-ந் தேதி வரை 5 நாட்கள் நடக்கிறது.

    முதல் நாளான நேற்று மாலை உற்சவர் ரெங்கநாச்சியார் மூலஸ்தானத்திலிருந்து மாலை 6.30 மணிக்கு புறப்பட்டு கோடை நாலுக்கால் மண்டபத்திற்கு இரவு 7 மணிக்கு வந்து சேர்ந்தார். அங்கு புஷ்பம் சாத்துப்படி கண்டருளிய பின்னர் 8 மணிக்கு மண்டபத்திலிருந்து புறப்பட்டு இரவு 8.45 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    வெளிக்கோடை உற்சவத்தை முன்னிட்டு 21-ந் தேதி வரை மாலை 5 மணிக்கு மேல் 6.30 மணிவரை தாயார் சன்னதியில் மூலஸ்தான சேவை கிடையாது. ரெங்கநாச்சியார் உள்கோடை உற்சவம் 22-ந் தேதி முதல் 26-ந் தேதி வரை 5 நாட்கள் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் ஜெயராமன் மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.
    Next Story
    ×