என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
சங்கரன்கோவில் சங்கர நாராயண சுவாமி கோவிலில் விநாயகர் தேர் வெள்ளோட்டம்
Byமாலை மலர்29 April 2017 6:44 AM GMT (Updated: 29 April 2017 6:44 AM GMT)
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் சங்கர நாராயண சுவாமி கோவிலில் விநாயகர் தேர் வெள்ளோட்டம் நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் சங்கர நாராயண சுவாமி கோவில் தென் தமிழகத்தின் மிகவும் பிரசித்தி பெற்ற சைவ வைணவ திருத்தலமாகும். இந்த கோவிலில் ஆடித்தவசு திருவிழா, சித்திரை திருவிழா உள்ளிட்ட பல்வேறு திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம். இந்த கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
ஆடித்தவசு திருவிழா, சித்திரை திருவிழா, திருவாதிரை திருவிழா ஆகிய திருவிழாக்களில் காலை 5 மணிக்கு விநாயகர் தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். ஆனால் விநாயகர் தேர் கடந்த 25 ஆண்டுகளாக பராமரிப்பு இன்றி சிதிலமடைந்து இருந்தது.
இதனால் விநாயகர் தேர் கடந்த 25 ஆண்டுகளாக ஓடவில்லை. மேலும் விநாயகர் தேரோட்டம் ஒவ்வொரு திருவிழாக்களிலும் நடைபெற வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அப்போதைய முதல்-அமைச்சர் ஜெயலலிதா புதிய தேர் செய்ய ரூ.9 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தார். கடந்த 3 ஆண்டுகளாக புதிய தேர் செய்யும் பணி நடைபெற்று நேற்று காலை 6 மணிக்கு மேல் ரத வீதிகளில் தேர் வெள்ளோட்டம் நடைபெற்றது. தேர் வெள்ளோட்டம் நிகழ்ச்சியில் கோவில் துணை ஆணையர் பொன் சுவாமிநாதன் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேர் இழுத்தனர்.
ஆடித்தவசு திருவிழா, சித்திரை திருவிழா, திருவாதிரை திருவிழா ஆகிய திருவிழாக்களில் காலை 5 மணிக்கு விநாயகர் தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். ஆனால் விநாயகர் தேர் கடந்த 25 ஆண்டுகளாக பராமரிப்பு இன்றி சிதிலமடைந்து இருந்தது.
இதனால் விநாயகர் தேர் கடந்த 25 ஆண்டுகளாக ஓடவில்லை. மேலும் விநாயகர் தேரோட்டம் ஒவ்வொரு திருவிழாக்களிலும் நடைபெற வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அப்போதைய முதல்-அமைச்சர் ஜெயலலிதா புதிய தேர் செய்ய ரூ.9 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தார். கடந்த 3 ஆண்டுகளாக புதிய தேர் செய்யும் பணி நடைபெற்று நேற்று காலை 6 மணிக்கு மேல் ரத வீதிகளில் தேர் வெள்ளோட்டம் நடைபெற்றது. தேர் வெள்ளோட்டம் நிகழ்ச்சியில் கோவில் துணை ஆணையர் பொன் சுவாமிநாதன் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேர் இழுத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X