என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
கண்ணகி கோவில் சித்ரா பவுர்ணமி திருவிழா கொடியேற்றம்
Byமாலை மலர்29 April 2017 5:36 AM GMT (Updated: 29 April 2017 5:36 AM GMT)
கூடலூர் அருகே கண்ணகி கோவில் சித்ரா பவுர்ணமி திருவிழா கொடியேற்றம் நேற்று நடந்தது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
தமிழக- கேரள எல்லையில் தேனி மாவட்டம் கூடலூர் அருகே வனப்பகுதியில் பளியன்குடியிருப்பு உள்ளது. இந்த பகுதியில் மலையின் மேலே மங்கலதேவி கண்ணகி கோவில் அமைந்துள்ளது. இதனை மங்கலதேவி கண்ணகி கோட்டம் என்று அழைக்கின்றனர். பல நூற்றாண்டுகளுக்கு முன்பு தமிழக மன்னர்களால் இங்கு கண்ணகி கோவில் கட்டப்பட்டது. இந்த கோவிலுக்கு தமிழகத்தில் இருந்து செல்லும் பக்தர்கள் பளியன்குடியிருப்பு பகுதி வழியாக வனப்பகுதியில் நடந்து செல்ல வேண்டும். இந்த பாதையை பயன்படுத்த திருவிழா நாளில் மட்டும் தமிழக வனத்துறையினர் அனுமதி அளிப்பார்கள்.
இவையில்லாமல் கேரள மாநிலம் குமுளியில் இருந்து மலைப்பாதை வழியாக ஜீப் போன்ற வாகனங்களில் சென்று வரலாம். ஆனால் இந்த மலைப்பாதையையும் திருவிழா நடைபெறும் போது ஒரு நாள் மட்டும் கேரள வனத்துறையினர் திறந்துவிடுவார்கள். மற்ற நேரங்களில் இந்த பாதை மூடப்பட்டு இருக்கும்.
ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமி அன்று கண்ணகி கோவில் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. விழாவில் தேனி மாவட்டம் மற்றும் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கேரள மாநிலத்தில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்துகொள்வார்கள். இந்த விழா ஒரு வாரம் நடைபெற்று வந்தது. தற்போது ஒரு நாள் மட்டும் திருவிழா நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு சித்ரா பவுர்ணமி விழா வருகிற 10-ந் தேதி நடக்கிறது.
விழாவையொட்டி பளியன்குடியிருப்பில் நேற்று காலையில் கொடியேற்றம் நடைபெற்றது. பச்சை மூங்கிலில் கண்ணகி உருவம் பொறித்த கொடியேற்றப்பட்டது. முன்னதாக கொடிமரத்துக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. கொடியேற்றம் நிகழ்ச்சியில் கூடலூர்- கம்பம் கண்ணகி கோவில் அறக்கட்டளை குழுவினர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
விழா நடைபெறுவதையொட்டி தமிழக வனப்பகுதியில் பளியன்குடியிருப்பில் இருந்து கண்ணகி கோவிலுக்கு செல்லும் மலைப்பாதையை சீரமைக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
இவையில்லாமல் கேரள மாநிலம் குமுளியில் இருந்து மலைப்பாதை வழியாக ஜீப் போன்ற வாகனங்களில் சென்று வரலாம். ஆனால் இந்த மலைப்பாதையையும் திருவிழா நடைபெறும் போது ஒரு நாள் மட்டும் கேரள வனத்துறையினர் திறந்துவிடுவார்கள். மற்ற நேரங்களில் இந்த பாதை மூடப்பட்டு இருக்கும்.
ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமி அன்று கண்ணகி கோவில் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. விழாவில் தேனி மாவட்டம் மற்றும் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கேரள மாநிலத்தில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்துகொள்வார்கள். இந்த விழா ஒரு வாரம் நடைபெற்று வந்தது. தற்போது ஒரு நாள் மட்டும் திருவிழா நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு சித்ரா பவுர்ணமி விழா வருகிற 10-ந் தேதி நடக்கிறது.
விழாவையொட்டி பளியன்குடியிருப்பில் நேற்று காலையில் கொடியேற்றம் நடைபெற்றது. பச்சை மூங்கிலில் கண்ணகி உருவம் பொறித்த கொடியேற்றப்பட்டது. முன்னதாக கொடிமரத்துக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. கொடியேற்றம் நிகழ்ச்சியில் கூடலூர்- கம்பம் கண்ணகி கோவில் அறக்கட்டளை குழுவினர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
விழா நடைபெறுவதையொட்டி தமிழக வனப்பகுதியில் பளியன்குடியிருப்பில் இருந்து கண்ணகி கோவிலுக்கு செல்லும் மலைப்பாதையை சீரமைக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X