என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
அகத்தீஸ்வரர் கோவிலில் பிரத்யங்கராதேவிக்கு மிளகாய் யாகம்
Byமாலை மலர்27 April 2017 3:17 AM GMT (Updated: 27 April 2017 3:17 AM GMT)
பாதூர் அகத்தீஸ்வரர் கோவிலில் அமாவாசையையொட்டி பிரத்யங்கராதேவிக்கு மிளகாய் யாகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பாதூரில் பிரசித்தி பெற்ற அகத்தீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் மாதந்தோறும் அமாவாசை அன்று பிரத்யங்கராதேவிக்கு மிளகாய் யாகம் நடைபெறுவது வழக்கம்.
அதன்படி சித்திரை மாத அமாவாசையான நேற்று பிரத்யங்கராதேவிக்கு மிளகாய் யாகம் நடைபெற்றது. இதையொட்டி பிரத்யங்கராதேவிக்கு பால், தயிர், சந்தனம், விபூதி, இளநீர் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
இதை தொடர்ந்து சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் யாக சாலையில் அமைக்கப்பட்டிருந்த குண்டத்தில் பக்தர்கள் தங்களது வேண்டுதலை வெற்றிலையில் குறிப்பிட்டு போட்டனர். அதை தொடர்ந்து மிளகாய் யாகம் நடைபெற்றது.
இதில் உளுந்தூர்பேட்டை, திருக்கோவிலூர், தியாகதுருகம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் பொது மக்கள் செய்திருந்தனர்.
அதன்படி சித்திரை மாத அமாவாசையான நேற்று பிரத்யங்கராதேவிக்கு மிளகாய் யாகம் நடைபெற்றது. இதையொட்டி பிரத்யங்கராதேவிக்கு பால், தயிர், சந்தனம், விபூதி, இளநீர் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
இதை தொடர்ந்து சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் யாக சாலையில் அமைக்கப்பட்டிருந்த குண்டத்தில் பக்தர்கள் தங்களது வேண்டுதலை வெற்றிலையில் குறிப்பிட்டு போட்டனர். அதை தொடர்ந்து மிளகாய் யாகம் நடைபெற்றது.
இதில் உளுந்தூர்பேட்டை, திருக்கோவிலூர், தியாகதுருகம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் பொது மக்கள் செய்திருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X