என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
சேலம் பெருமாள் கோவில்களில் ராமானுஜர் ஜெயந்தி விழா
Byமாலை மலர்26 April 2017 5:32 AM GMT (Updated: 26 April 2017 5:32 AM GMT)
சேலம் பிரசன்ன வரதராஜப்பெருமாள் கோவில் வசந்த மண்டபத்தில் ராமானுஜரின் 1000-ம் ஆண்டு ஜெயந்தி விழா நடந்து வருகிறது.
சேலம் பிரசன்ன வரதராஜப்பெருமாள் கோவில் வசந்த மண்டபத்தில் ராமானுஜரின் 1000-ம் ஆண்டு ஜெயந்தி விழா நடந்து வருகிறது. விழாவையொட்டி தினமும் காலை 9.30 மணிக்கு திருமஞ்சனமும், மாலை 6 மணிக்கு திருவாராதனமும் நடக்கிறது. இன்று(புதன்கிழமை) தியாகராஜன் புல்லாங்குழல் இன்னிசையும், நாளை(வியாழக்கிழமை) கோட்டை உமாமகேஸ்வரி வீணை கச்சேரியும், 28-ந் தேதி கோலாட்ட நிகழ்ச்சியும், 29-ந் தேதி லட்சுமண ராமானுஜதாசர் உபன்யாசமும், 30-ந் தேதி மாணவிகளின் பரதநாட்டிய நிகழ்ச்சியும், அடுத்த மாதம்(மே) 1-ந் தேதி புதுச்சேரி ஜோசப் உபன்யாசமும், 2-ந் தேதி சத்தாபரணம் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
இதேபோல சேலம் அம்மாபேட்டை மெயின் ரோட்டில் உள்ள சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் 28-ம் ஆண்டு பிரமோத்சவமும், ராமானுஜரின் 1000-ம் ஆண்டு விழாவும் நடந்து வருகிறது. விழாவையொட்டி இன்று(புதன்கிழமை) காலை 8 மணிக்கு பெருமாள் இந்திர விமானத்தில் புறப்பாடும், இரவு 8 மணிக்கு கஜ வாகனத்தில் சாமி திருவீதி உலாவும், நாளை(வியாழக் கிழமை) காலை 8 மணிக்கு பெருமாள் திருப்பல்லக்கில் புறப்பாடும், இரவு 7 மணிக்கு கருட வாகனத்தில் புறப்பாடும், நடக்கிறது. அதைத்தொடர்ந்து அடுத்த மாதம் 7-ந் தேதி வரை தினமும் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் திருவீதி உலா நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் விழாக்குழுவினர் செய்து வருகிறார்கள்.
இதேபோல சேலம் அம்மாபேட்டை மெயின் ரோட்டில் உள்ள சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் 28-ம் ஆண்டு பிரமோத்சவமும், ராமானுஜரின் 1000-ம் ஆண்டு விழாவும் நடந்து வருகிறது. விழாவையொட்டி இன்று(புதன்கிழமை) காலை 8 மணிக்கு பெருமாள் இந்திர விமானத்தில் புறப்பாடும், இரவு 8 மணிக்கு கஜ வாகனத்தில் சாமி திருவீதி உலாவும், நாளை(வியாழக் கிழமை) காலை 8 மணிக்கு பெருமாள் திருப்பல்லக்கில் புறப்பாடும், இரவு 7 மணிக்கு கருட வாகனத்தில் புறப்பாடும், நடக்கிறது. அதைத்தொடர்ந்து அடுத்த மாதம் 7-ந் தேதி வரை தினமும் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் திருவீதி உலா நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் விழாக்குழுவினர் செய்து வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X