search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பலன்கள் தரும் ஆன்மிக வழிபாடுகள்
    X

    பலன்கள் தரும் ஆன்மிக வழிபாடுகள்

    அனைத்து வளமும் பெற்று குடும்பத்தில் செல்வமும், மகிழ்ச்சியும் பெருக என்னென்ன வழிபாடுகளை செய்ய வேண்டும் என்பதை விரிவாக பார்க்கலாம்.
    * வீட்டில் விரதமிருந்து சுமங்கலி பூஜை செய்தால், சவுபாக்கியம் கிடைக்கும், இல்லத்தில் சுப காரியங்கள் நடைபெறும்.

    * வீட்டில் துளசி வளர்த்தால், செல்வம் பெருகும், பாவங்கள் நீங்கும்.

    * சான்றோர்களை உபசரித்து ஆசிபெற்றால், ஆயுள் விருத்தி உண்டாகும், சகல தோஷமும் விலகும்.

    * விருந்தினரை மனம் நோகாமல் உபசரித்தால், புண்ணியம் சேரும்.

    * கோவில் திருப்பணிக்கு உதவினால், மறுபிறப்பு இல்லாத நிலை உருவாகும், உறவினர் பகை மாறும்.

    * கோவிலில் உழவாரப் பணிசெய்தால், வாழ்க்கையில் வளர்ச்சி கூடும், காரிய தடை விலகும்.

    * வீட்டில், ஆலயத்தில் தெய்வீக மரம் வைத்தால், லட்சுமி கடாட்சம் கிடைக்கும், மழை வளம் பெருகும்.
    Next Story
    ×