என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
கும்பகோணம் சாரங்கபாணி கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
Byமாலை மலர்13 April 2017 4:59 AM GMT (Updated: 13 April 2017 4:59 AM GMT)
கும்பகோணம் சாரங்கபாணி கோவிலில் நடைபெற்ற திருக்கல்யாண உற்சவத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள சாரங்கபாணி கோவில், 108 வைணவ தலங்களில் ஒன்றாகும். இங்கு சாரங்கபாணி பெருமாளுடன், கோமளவல்லி தாயார் அருள்பாலித்து வருகிறார். பிரசித்திப்பெற்ற இக்கோவிலில் பங்குனி திருவிழா கடந்த 1-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
அதைத்தொடர்ந்து கண்ணாடி கமல வாகனம், வெள்ளி சேஷ வாகனம், வெள்ளி யானை வாகனம் உள்ளிட்ட அலங்கார வாகனங்களில் கோமளவல்லி தாயார் புறப்பாடு நடைபெற்றது. பின்னர் சக்கரபாணிசாமி, சாரங்கபாணி சாமியுடன் எழுந்தருளல் நிகழ்ச்சியும், பெருமாள்-தாயார் மாலை மாற்றுதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
விழாவில் நேற்றுமுன்தினம் இரவு சாரங்கபாணி பெருமாள்-கோமளவல்லி தாயார் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. முன்னதாக கோமளவல்லி தாயார் தேசிகர் சன்னதி எதிரே எழுந்தருளினார். இதையடுத்து ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து சாரங்கபாணி-கோமளவல்லி தாயார் திருக்கல்யாணம் நடை பெற்றது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
அதைத்தொடர்ந்து கண்ணாடி கமல வாகனம், வெள்ளி சேஷ வாகனம், வெள்ளி யானை வாகனம் உள்ளிட்ட அலங்கார வாகனங்களில் கோமளவல்லி தாயார் புறப்பாடு நடைபெற்றது. பின்னர் சக்கரபாணிசாமி, சாரங்கபாணி சாமியுடன் எழுந்தருளல் நிகழ்ச்சியும், பெருமாள்-தாயார் மாலை மாற்றுதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
விழாவில் நேற்றுமுன்தினம் இரவு சாரங்கபாணி பெருமாள்-கோமளவல்லி தாயார் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. முன்னதாக கோமளவல்லி தாயார் தேசிகர் சன்னதி எதிரே எழுந்தருளினார். இதையடுத்து ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து சாரங்கபாணி-கோமளவல்லி தாயார் திருக்கல்யாணம் நடை பெற்றது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X