search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    தண்ணீரில் விளக்கு சுடர்விட்டு எரியும் அதிசய காட்சி.
    X
    தண்ணீரில் விளக்கு சுடர்விட்டு எரியும் அதிசய காட்சி.

    ராசிபுரம் அருகே கோவில் திருவிழாவில் தண்ணீரில் விளக்கு எரிந்த அதிசயம்

    பிரசித்தி பெற்ற பச்சை தண்ணி மாரியம்மன் கோவில் திருவிழாவில் விளக்கு எண்ணெயில் எரிவது போல் தண்ணீரிலும் கொழுந்துவிட்டு எரிந்தது.
    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகேயுள்ள தட்டான்குட்டையில் பிரசித்தி பெற்ற பச்சை தண்ணி மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் திருவிழா ஆண்டுதோறும் பங்குனி மாதம் வெகு விமரிசையாக நடந்து வருகிறது. திருவிழாவின் போது தண்ணீரில் விளக்கை எரிய வைப்பது வழக்கம்.

    இந்த ஆண்டு திருவிழா கடந்த 9-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. திருவிழாவை முன்னிட்டு நேற்று அதிகாலையில் தண்ணீரில் விளக்கை எரிய வைக்க, கோவில் பூசாரிகள் நடேசன், கார்த்திக் ஆகியோர் கோவில் கிணற்றில் புனித நீராடி குடத்தில் தண்ணீரை எடுத்து வந்தனர். பின்னர் அவர்கள் சாமி முன்பு சுடர் விட்டு எரிந்து கொண்டிருந்த விளக்கில் இருந்த எண்ணெய் முழுவதையும் வடித்துவிட்டு கிணற்றில் இருந்து கொண்டு வந்த தண்ணீரை விளக்கில் ஊற்றி தீப்பற்ற வைத்தனர்.

    அப்போது விளக்கு எண்ணெயில் எரிவது போல் தண்ணீரிலும் கொழுந்துவிட்டு எரிந்தது. இந்த அதிசய காட்சியை திருவிழாவிற்கு வந்திருந்த ஏராளமான பக்தர்கள் கண்டு பரவசம் அடைந்தனர். தண்ணீரில் அதிகாலையில் பற்ற வைக்கப்பட்ட விளக்கு சுமார் 1 மணி நேரத்திற்கு மேல் எரிந்து பின்னர் அணைந்தது.
    Next Story
    ×