என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
திருவானைக்காவல் கோவிலில் சுந்தரபாண்டியன் கிழக்கு ராஜகோபுர திருப்பணிக்கான முகூர்த்தக்கால் நடப்பட்டது
Byமாலை மலர்7 April 2017 7:33 AM GMT (Updated: 7 April 2017 7:33 AM GMT)
திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலில் சுந்தரபாண்டியன் கிழக்கு ராஜகோபுர திருப்பணிக்கான முகூர்த்தக்கால் நடப்பட்டது.
திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி கோவில் பஞ்ச பூத ஸ்தலங்களில் நீர் ஸ்தலமாகும். இக்கோவில் கும்பாபிஷேகம் கடந்த 2000-ம் ஆண்டு நடைபெற்றது. கோவில்களுக்கு 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் இக்கோவிலில் 16 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது ரூ.4 கோடி செலவில் திருப்பணிகள் செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி கோவிலில் உள்ள 11 கோபுரங்கள், 25 விமானங்களுக்கு திருப்பணிகள் தொடங்குவதற்காக கடந்த ஆண்டு மே மாதம் 29-ந் தேதி பாலாலயம் நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து கோவில் வளாகத்தில் சிறு, சிறு பணிகள் நடைபெற்று வந்தன. கடந்த மாதம் 22-ந் தேதி மேற்கு வாசல் பிரதான ராஜகோபுரம், மல்லப்பன் கோபுரம், கார்த்திகை கோபுரம் உள்ளிட்ட கோபுரங்களின் திருப்பணிக்காக முகூர்த்தக்கால் நடப்பட்டது.
இதைத்தொடர்ந்து சுந்தரபாண்டியன் கிழக்கு ராஜகோபுர திருப்பணிக்கான முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதையொட்டி சிறப்பு யாகங்கள் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. முகூர்த்தக்காலின் நுனியில் சந்தனம், மாவிலை, பூமாலை உள்ளிட்ட மங்களப்பொருட்கள் அணிவிக்கப்பட்டு மந்திரங்கள் ஓதி புனிதநீர் தெளிக்கப்பட்டது.
பின்னர் கிழக்கு ராஜகோபுரத்தின் அருகில் முகூர்த்தக்கால் நடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கோவில் உதவி ஆணையர் ஜெயப்பிரியா, முன்னாள் அறங்காவலர்கள் ரெங்கநாதன், சாத்தப்பன், ராமசாமி, கதிரேசன் மற்றும் கோவில் அதிகாரிகள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
அதன்படி கோவிலில் உள்ள 11 கோபுரங்கள், 25 விமானங்களுக்கு திருப்பணிகள் தொடங்குவதற்காக கடந்த ஆண்டு மே மாதம் 29-ந் தேதி பாலாலயம் நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து கோவில் வளாகத்தில் சிறு, சிறு பணிகள் நடைபெற்று வந்தன. கடந்த மாதம் 22-ந் தேதி மேற்கு வாசல் பிரதான ராஜகோபுரம், மல்லப்பன் கோபுரம், கார்த்திகை கோபுரம் உள்ளிட்ட கோபுரங்களின் திருப்பணிக்காக முகூர்த்தக்கால் நடப்பட்டது.
இதைத்தொடர்ந்து சுந்தரபாண்டியன் கிழக்கு ராஜகோபுர திருப்பணிக்கான முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதையொட்டி சிறப்பு யாகங்கள் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. முகூர்த்தக்காலின் நுனியில் சந்தனம், மாவிலை, பூமாலை உள்ளிட்ட மங்களப்பொருட்கள் அணிவிக்கப்பட்டு மந்திரங்கள் ஓதி புனிதநீர் தெளிக்கப்பட்டது.
பின்னர் கிழக்கு ராஜகோபுரத்தின் அருகில் முகூர்த்தக்கால் நடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கோவில் உதவி ஆணையர் ஜெயப்பிரியா, முன்னாள் அறங்காவலர்கள் ரெங்கநாதன், சாத்தப்பன், ராமசாமி, கதிரேசன் மற்றும் கோவில் அதிகாரிகள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X