என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
ஸ்ரீரங்கம் கோவில் தேர் திருவிழா: நம்பெருமாள் பல்லக்கில் ஜீயபுரம் சென்றார்
Byமாலை மலர்3 April 2017 5:20 AM GMT (Updated: 3 April 2017 5:20 AM GMT)
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பங்குனி தேர் திருவிழாவை முன்னிட்டு நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் புறப்பட்டு சித்திரை வீதிகளில் வலம் வந்தார்.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பங்குனி தேர் திருவிழா நேற்று முன்தினம் காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று மாலை நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் திருச்சிவிகையில் புறப்பட்டு சித்திரை வீதிகளில் வலம் வந்தார்.
விழாவின் 2-ம் நாளான நேற்று நம்பெருமாள் கண்ணாடி அறையில் இருந்து புறப்பட்டு கருடமண்டபம் வந்தடைந்தார். அங்கு மாலை வரை பக்தர்களுக்கு காட்சியளித்தார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு கண்ணாடி அறையை சென்றடைந்தார்.
இரவில் நம்பெருமாள் கண்ணாடி அறையில் இருந்து பல்லக்கில் புறப்பட்டு மேலூர் வழியாக ஜீயபுரம் செல்லும் வழியில் வழிநடை உபயங்கள் கண்டருளி இன்று(திங்கட்கிழமை) காலை 11 மணிக்கு ஜீயபுரம் ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.
நாளை(செவ்வாய்க்கிழமை) கருடசேவையும், 5-ந் தேதி காலை சேஷவாகனத்திலும், மாலை கற்பக விருட்ச வாகனத்திலும் நம்பெருமாள் எழுந்தருளி சித்திரை வீதிகளில் வலம் வருகிறார். 9-ந் தேதி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பங்குனி உத்திர தினத்தன்று ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் தாயார் சேர்த்தி சேவை நடைபெறுகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் 10-ந் தேதி நடக்கிறது.
விழாவின் 2-ம் நாளான நேற்று நம்பெருமாள் கண்ணாடி அறையில் இருந்து புறப்பட்டு கருடமண்டபம் வந்தடைந்தார். அங்கு மாலை வரை பக்தர்களுக்கு காட்சியளித்தார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு கண்ணாடி அறையை சென்றடைந்தார்.
இரவில் நம்பெருமாள் கண்ணாடி அறையில் இருந்து பல்லக்கில் புறப்பட்டு மேலூர் வழியாக ஜீயபுரம் செல்லும் வழியில் வழிநடை உபயங்கள் கண்டருளி இன்று(திங்கட்கிழமை) காலை 11 மணிக்கு ஜீயபுரம் ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.
நாளை(செவ்வாய்க்கிழமை) கருடசேவையும், 5-ந் தேதி காலை சேஷவாகனத்திலும், மாலை கற்பக விருட்ச வாகனத்திலும் நம்பெருமாள் எழுந்தருளி சித்திரை வீதிகளில் வலம் வருகிறார். 9-ந் தேதி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பங்குனி உத்திர தினத்தன்று ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் தாயார் சேர்த்தி சேவை நடைபெறுகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் 10-ந் தேதி நடக்கிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X